- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: எப்பப் பார்த்தாலும் அரிசி அரிசின்னே ஓடிட்டிருக்கீங்களே.. அட அதை கொஞ்சம் அப்படியே வைங்க.. சிறு தானியங்களை கொஞ்சம் சாப்பிட ஆரம்பிங்க.. உடம்புக்கும் நல்லது, ஆரோக்கியமும் சூப்பராக மேம்படும். அப்படிப்பட்ட ஒரு சிறந்த சிறு தானிய உணவுதான் இந்த வரகு பொங்கல். இதுக்கு தேங்காய் மல்லி சட்னி செமத்தியான காம்போ.
சரி இதை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க.
வரகு பொங்கல்

தேவையான பொருட்கள்
வரகு அரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - ஒரு கப் (இரண்டையும் லேசாக வறுத்து கழுவவும்)
சீரகம் - ஒரு ஸ்பூன்
மிளகு - ஒரு ஸ்பூன்
இஞ்சி பூண்டு - ஒரு ஸ்பூன் கட் செய்தது பொடியாக
முந்திரி - 10
நெய் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு ஈக்கு
சட்னி (உப்பு காரம் தேவைக்கு ஏற்ப)
தேங்காய் துருவல் - ஆறு ஸ்பூன்
உடைத்த கடலை - நாலு ஸ்பூன்
மல்லித்தழை - ஒரு கைப்பிடி (கழுவி கட் செய்க)
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு - அரை ஸ்பூன் கட் செய்தது
இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் தண்ணீர் விட்டு அரைக்கவும். சூப்பர் சட்னி ரெடி.
பொங்கல் செய்முறை
1. வரகு + பாசிப்பருப்பு அதற்கு நாலரை கப் தண்ணீர் ஊற்றி (அளவுக்கு ஒரே கப் வைத்துக் கொள்ள வேண்டும்).
2. சீரகம் மிளகு கறிவேப்பிலை சேர்த்து கொதி வர வேண்டும்
3. இஞ்சி பூண்டு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விசில் விடவும் (கமகமன்னு இருக்கா..!)
4. பிரஷர் அடங்கியதும் நெய்யில் முந்திரி வறுத்து பொங்கல் உடன் கிளறவும். இப்போ பொங்கல் ரெடி
பலன்கள்
1. வரகு அரிசியில் கோதுமையை விட நார்ச்சத்து அதிகம் மாவுச்சத்து இதில் குறைவு.
2. ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது.
3. வெயிட் லாசுக்கு ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
4. நல்ல பில்லிங் ஆன உணவு.
5. குடல் புண் குணமாகும் மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும்.
6. இரும்பு சத்து வைட்டமின்கள் பாஸ்பரஸ் கால்சியம் தாது உப்புக்கள் நிறைந்தது இதயம் பலப்பட்டு இதய ஆரோக்கியம் மேம்படும்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}