டெல்லி: ஆந்திரா, தெலுங்கானா உள்பட 9 மாநிலங்களில் 96 தொகுதிகளில் நான்காம் கட்ட லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ஏழு கட்டங்களாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன்படி கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் 66.14 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 26 ஆம் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 66.71% வாக்குகள் பதிவாகின. கடந்த வாரம் மே ஏழாம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அதில் 65.68 சதவீத வாக்குகள் பதிவானது.

இந்த நிலையில் இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் 25 தொகுதிகளிலும் , தெலங்கானாவில் 17 தொகுதிகளிலும், உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 8 தொகுதிகளில், பீகாரில் 5 தொகுதிகள், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் தலா 4 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். அதிகாலை முதலே பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், நடிகர் நடிகைகள் என அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களின் ஜனநாயக கடமையை
ஆற்றி வருகின்றனர். ஆந்திராவில் சட்டசபைத் தேர்தலும் நடைபெறுவதால் அங்கு மக்கள் இரண்டு வாக்குகளை அளிக்க வேண்டும்.
நான்காம் கட்ட தேர்தல் அமைதியான முறையிலும், பாதுகாப்பான முறையிலும் நடைபெற தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழக போலீசார், முன்னாள் ராணுவத்தினர் உட்பட 1.06 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}