மும்பை: டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் H-1B விசா கட்டணத்தை உயர்த்தியதால் பங்குச் சந்தை நேற்று தளர்ச்சியுடன் தொடங்கிய நிலையில், இன்று காலை இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.
நிஃப்டி 25,200 புள்ளிகளுக்கு அதிகமாகவும், பிஎஸ்இ சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு அதிகமாகவும் உயர்ந்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் அமெரிக்கப் பயணம் மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகள், சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு முக்கிய காரணங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், எஃப்ஐஐ முதலீடுகள், கச்சா எண்ணெய் விலை மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்கள் இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று காலை 9:16 மணிக்கு, நிஃப்டி 50 36 புள்ளிகள் உயர்ந்து 25,238.10 ஆக இருந்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்ந்து 82,272.81 ஆக இருந்தது.

ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் டாக்டர். வி.கே. விஜயகுமார் கூறுகையில், "2024 செப்டம்பர் உச்சத்திற்குப் பிறகு சந்தையில் ஏற்பட்ட பெரிய பின்னடைவுக்கு முக்கிய காரணம், எஃப்ஐஐ விற்பனைதான். இந்தியாவின் அதிக மதிப்பீடுகள் மற்றும் மற்ற இடங்களில் உள்ள கவர்ச்சிகரமான மதிப்பீடுகளால் இது தூண்டப்படுகிறது. எஃப்ஐஐகள் 2024-ல் ரூ. 121210 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை எக்ஸ்சேஞ்ச் மூலம் ரூ. 179200 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனர். இந்தியாவுக்கும் மற்ற சந்தைகளுக்கும் இடையிலான அதிக மதிப்பு வேறுபாடு, எஃப்ஐஐகள் இந்தியாவில் இருந்து மற்ற சந்தைகளுக்கு பணத்தை மாற்றி லாபம் ஈட்ட உதவியது." என்று கூறினார்.
இதற்கிடையே, அமெரிக்க பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய உச்சத்தை தொட்டுள்ளன. தொழில்நுட்ப பங்குகள் அதிக லாபம் அடைந்துள்ளன. Nvidia நிறுவனம் OpenAI-ல் 100 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
Wall Street சந்தையின் ஏற்றத்தை தொடர்ந்து ஆசிய சந்தைகளும் இன்று காலையில் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளன. தொழில்நுட்ப பங்குகள் மீதான நம்பிக்கை அதிகரித்ததால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் ரஷ்யாவில் நடந்து வரும் போர்களின் விளைவுகளை சந்தை பங்கேற்பாளர்கள் மதிப்பிட்டு வருவதால், கச்சா எண்ணெய் விலை நிலையாக உள்ளது. வர்த்தக வரிகள் காரணமாக தேவை குறையக்கூடும் என்ற கவலைகள் நீடிக்கின்றன.
சிந்தனைச் சிதறல்.. உறவினும் மேலான ஒரு இதயம் தேவை!
Tamil Short story: முற்பகல் செய்யின்!
உன்னுடன் என் கடைசி இரவு!
We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!
Tamil Short Story: சிரிச்ச மூஞ்சி!
Annamalai Politics: அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கும்?
பாஜகவிலிருந்து விலகினார்.. அண்ணாமலையின் புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது!
உலக சுற்றுச்சூழல் தினம்.. கொண்டாடுவோம் இயற்கையை.. பாதுகாப்போம் பூமியை!
ஆசையே அலை போலே!
{{comments.comment}}