4 ஆண்டு சிறை.. பகுஜன் சமாஜ் கட்சியின் அப்சல் அன்சாரியின்.. எம்.பி பதவி காலி!

May 02, 2023,01:59 PM IST

டெல்லி: பாஜக எம்எல்ஏவைக் கடத்தில் கொலை செய்த வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. அப்சல் அன்சாரியின், பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அப்சல் அன்சாரி, உத்தரப் பிரதேச மாநிலம் காஸிப்பூர் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  இவருக்கு எம்.பி. எம்எல்ஏ கோர்ட் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து தற்போது அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.



இவரது சகோதரர்தான் கிரிமினலாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரி. அவருக்கு இந்த வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டா ஆதிக் அகமது சகோதரர்கள் போலத்தான் இந்த அன்சாரி சகோதரர்களும். 

காஸிப்பூர் எம்எல்ஏவாக இருந்தவர் பாஜகவைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராய். இவர் 2005ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி அன்சாரி சகோதரர்களால் கடத்தப்பட்டார். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டார். அதேபோல இதே கும்பலால் 1997ம் ஆண்டு வாரணாசியைச் சேர்ந்த வர்த்தகர் நந்த் கிஷோர் ருங்காத என்பவரும் கடத்திக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில்தன் தற்போது அன்சாரி சகோதரர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்சல் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக லோக்சபா செயலகம் அறிவித்துள்ளது. சமீபத்தில்தான் ராகுல் காந்தியின் பதவியையும் லோக்சபா செயலகம் தகுதி நீக்கம் செய்தது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்