டில்லி : இது ஏழைகள், விவசாயிகள், பெண்களுக்கான பட்ஜெட் என தனது ஆறாவது பட்ஜெட் உரையில் மத்திய நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளதால் 2024-25ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 6வது பட்ஜெட் உரை ஆகும். அவர் தனது பட்ஜெட் உரையில், பாஜக தலைமையிலான அரசு வளர்ச்சி அடிப்படையாக கொண்டு பணியாற்றி வருகிறது. அனைவருக்கும், அனைத்து தரப்பிலும் வளர்ச்சி, திருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் முன்னேற்றமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
இது ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்ட பட்ஜெட் ஆகும். இந்த நான்கு ஜாதிகள் மட்டுமே எங்களின் அரசில் உள்ளது. மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சூர்யஜ்வாலா திட்டத்தால் ஒவ்வொரு மாதமும் வீட்டின் மேல்தளத்தில் அமைக்கப்படும் சோலார் தகடுகளால் 300 யூனிட் மின்சாரத்தை ஒவ்வொரு குடும்பத்தினரும் பெற முடியும்.
இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. ஜிஎஸ்டி.,யால் வரி அடிப்படையிலான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். நாங்கள் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். எவ்வளவு செலவு என்பதை நினைக்காததால் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}