ஏழைகள், விவசாயிகள், பெண்களுக்கான பட்ஜெட் இது : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Feb 01, 2024,05:08 PM IST

டில்லி : இது ஏழைகள், விவசாயிகள், பெண்களுக்கான பட்ஜெட் என தனது ஆறாவது பட்ஜெட் உரையில் மத்திய நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.


லோக்சபா தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளதால் 2024-25ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 6வது பட்ஜெட் உரை ஆகும். அவர் தனது பட்ஜெட் உரையில், பாஜக தலைமையிலான அரசு வளர்ச்சி அடிப்படையாக கொண்டு பணியாற்றி வருகிறது. அனைவருக்கும், அனைத்து தரப்பிலும் வளர்ச்சி, திருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் முன்னேற்றமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். 




இது ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்ட பட்ஜெட் ஆகும். இந்த நான்கு ஜாதிகள் மட்டுமே எங்களின் அரசில் உள்ளது. மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சூர்யஜ்வாலா திட்டத்தால் ஒவ்வொரு மாதமும் வீட்டின் மேல்தளத்தில் அமைக்கப்படும் சோலார் தகடுகளால் 300 யூனிட் மின்சாரத்தை ஒவ்வொரு குடும்பத்தினரும் பெற முடியும். 


இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. ஜிஎஸ்டி.,யால் வரி அடிப்படையிலான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்.   நாங்கள் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். எவ்வளவு செலவு என்பதை நினைக்காததால் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்