கலைஞர் மருத்துவமனை டாக்டர் பாலாஜியை குத்தியால் குத்திய.. விக்னேஷ்வரன் மீது 5 பிரிவுகளில் வழக்கு!

Nov 13, 2024,07:47 PM IST

சென்னை:  சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் பாலாஜியை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்திய விக்னேஷ்வரன் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


கத்தியால் குத்திய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். டாக்டர் பாலாஜுக்கு தலை, காது முதுகு உள்ளிட்ட பகுதிகளில் குத்து விழுந்துள்ளது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறறார். இந்த சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.





இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.


அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.


இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.


என்ன நடந்தது?


மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்திய நபரின் பெயர் பெருங்களத்தூரைச்  சேர்ந்த விக்னேஷ்வரன். அவரது தாயார் பிரேமாவுக்கு அங்கு புற்றுநோய் சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த சிகிச்சை சரியில்லை என்று கருதியதாலும், தனது தாயாருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட டாக்டர் பாலாஜியின் தவறான சிகிச்சைதான் காரணம் என்றும் விக்னேஷ்வரன் கருதியுள்ளார். அதுதொடர்பாக ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாக மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ்வரன் கத்தியால் குத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இடம் போர்க்களம் போலக் காணப்படுகிறது. அந்த இடமே ரத்த வெள்ளமாக காணப்பட்டது. மிகவும் மோசமாக கத்தியால் குத்தியுள்ளார் விக்னேஷ்வரன்.  7 இடங்களில் டாக்டருக்கு குத்து விழுந்துள்ளதாக மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். மருத்துவர் பாலாஜியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் டாக்டர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.


5 பிரிவுகளின் கீழ் வழக்கு


தற்போது விக்னேஷ்வரன் மீது கிண்டி போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உதவி பேராசிரியர் டாக்டர் சேதுராமன் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!

news

அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!

news

கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை

news

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை

news

எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்

news

என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?

news

நமது துன்பத்திற்கு நாமே காரணமா?

news

திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு

news

ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்