திருவனந்தபுரம்: கேரளாவில் ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை வைக்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தினை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளுக்கு வரும் அரிசி மானியமாக மத்திய அரசால் கொடுக்கப்படுவதால் தான் பிரதமர் படம் வைக்க பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளின் முன்னர் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்த முடியாது என்று சட்டப்பேரவையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் வைக்க வேண்டும் என்று மாநில உணவுத்துறை செயலருக்கு, மத்திய உணவுத்துறை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து கேரளா சட்டசபையில் பேசிய அமைச்சர் ஜி.ஆர்.அனில் பேசுகையில், 14,000 ரேஷன் கடைகளில் பிரதமர் புகைப்படமும், 550 ரேஷன் கடைகளில் பிரதமன் செல்ஃபி பாயின்ட்களை நிறுவவும் அறிவுறுத்தல் வந்துள்ளது என்றார்.
இது குறித்து ஐ யூ எம் எல் அப்துல் ஹமீது எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் பிரனாயி விஜயன். மத்திய அரசின் உத்தரவை ஏற்கப்போவதில்லை. இது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு யுத்தியாகவே நாங்கள் பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை அணுகுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும்.. தவெக தலைவர் விஜய் பேச்சு
மக்கள் முக்கியமில்லை...பதவி தான் முக்கியம்...விஜய்யை விளாசிய டி.கே. எஸ். இளங்கோவன்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்ட மதுரை கலெக்டர்
செங்கோட்டையன் செல்லாக்காசு.. யாருமே ஏற்றுக் கொள்ளாததால் தவெகவுக்கு சென்றுள்ளார்: செல்லூர் ராஜூ
அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும்... தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
பாஜக எச்.ராஜா எப்படி இருக்கிறார்? அடுத்தடுத்து நலம் விசாரிக்கும் தலைவர்கள்
823 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயமா பிப்ரவரி 2026? – ஒரு சுவாரஸ்யமான அலசல்
மாம்பழ சின்னம் யாருக்கு?...பாமக வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் கட்?.. ஏன் இப்படி வதந்தி பரப்பறீங்க.. தனஞ்செயன் ஆதங்கம்
{{comments.comment}}