திருவனந்தபுரம்: கேரளாவில் ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை வைக்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தினை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளுக்கு வரும் அரிசி மானியமாக மத்திய அரசால் கொடுக்கப்படுவதால் தான் பிரதமர் படம் வைக்க பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளின் முன்னர் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்த முடியாது என்று சட்டப்பேரவையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் வைக்க வேண்டும் என்று மாநில உணவுத்துறை செயலருக்கு, மத்திய உணவுத்துறை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து கேரளா சட்டசபையில் பேசிய அமைச்சர் ஜி.ஆர்.அனில் பேசுகையில், 14,000 ரேஷன் கடைகளில் பிரதமர் புகைப்படமும், 550 ரேஷன் கடைகளில் பிரதமன் செல்ஃபி பாயின்ட்களை நிறுவவும் அறிவுறுத்தல் வந்துள்ளது என்றார்.
இது குறித்து ஐ யூ எம் எல் அப்துல் ஹமீது எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் பிரனாயி விஜயன். மத்திய அரசின் உத்தரவை ஏற்கப்போவதில்லை. இது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு யுத்தியாகவே நாங்கள் பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை அணுகுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}