திருவனந்தபுரம்: கேரளாவில் ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை வைக்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தினை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளுக்கு வரும் அரிசி மானியமாக மத்திய அரசால் கொடுக்கப்படுவதால் தான் பிரதமர் படம் வைக்க பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளின் முன்னர் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்த முடியாது என்று சட்டப்பேரவையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் வைக்க வேண்டும் என்று மாநில உணவுத்துறை செயலருக்கு, மத்திய உணவுத்துறை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து கேரளா சட்டசபையில் பேசிய அமைச்சர் ஜி.ஆர்.அனில் பேசுகையில், 14,000 ரேஷன் கடைகளில் பிரதமர் புகைப்படமும், 550 ரேஷன் கடைகளில் பிரதமன் செல்ஃபி பாயின்ட்களை நிறுவவும் அறிவுறுத்தல் வந்துள்ளது என்றார்.
இது குறித்து ஐ யூ எம் எல் அப்துல் ஹமீது எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் பிரனாயி விஜயன். மத்திய அரசின் உத்தரவை ஏற்கப்போவதில்லை. இது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு யுத்தியாகவே நாங்கள் பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை அணுகுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}