திருச்சி: திருச்சி கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் மீது வேகமாக சென்ற கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த கணவன் மனைவி, சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் மீது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் 50 அடி பள்ளத்தில் விழுந்தது. கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பை உடைத்துக் கொண்டு விழுந்துள்ளது. பள்ளத்தில் விழுந்த கார் அப்பளம் போல் நொருங்கியது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த தம்பதிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். உயிர் இழந்த இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
கேரளாவை சேர்ந்த ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவி இருவரும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இச்சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தில் உயிர் இழந்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!
கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்
மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!
அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!
அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி
தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்
{{comments.comment}}