சந்திரயான் 3 பற்றி கார்ட்டூன்.. பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு

Aug 23, 2023,10:09 AM IST
பாகல்கோட் : சந்திரயான் 3 விண்கலம் பற்றி ட்விட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் கார்டூன் வெளியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி உள்ள சந்திரயான் 3 விண்கலம் ஆகஸ்ட் 23 ம் தேதி மாலை நிலவில் தரையிறங்க உள்ளது. நிலவில் நிலப்பரப்பில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க போகும் அந்த தருணத்தை உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

நிலவை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா அனுப்பிய லூனா 25 திட்டம் தோல்வி அடைந்து விட்டதால் தற்போது ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனமும் இந்தியா பக்கம் திரும்பி உள்ளது.   இந்நிலையில் 2 நாட்களுக்கு முன், ஒருவர் டீ ஆத்தும் கார்டூன் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், சந்திரயான் 3 அனுப்பிய முதல் போட்டோ என கேப்ஷன் பதிவிட்டிருந்தார். 

பிரகாஷ் ராஜின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரகாஷ் ராஜிற்கு விஞ்ஞானம், அறியவில், அரசியல் என்றால் என்னவென்று பாடம் எடுக்க துவங்கி விட்டனர்.  தனக்கு எதிர்ப்பு வலுத்ததை அடுத்து தன்னுடைய போஸ்டிற்கு விளக்கம் அளித்து மீண்டும் ஒரு போஸ்ட் போட்டார் பிரகாஷ் ராஜ். அதில், ஆம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்தபோது வந்த ஜோக் இது. அந்த ஜோக்கைத்தான் பகிர்ந்தேன். ஒரு ஜோக்கை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் அதை தவறாக நீங்கள் புரிந்து கொண்டால் நான் என்ன செய்ய என குறிப்பிட்டிருந்தார். 

இதற்கும் நெட்டிசன்கள் கடும் கோபத்துடன் கருத்து தெரிவித்தனர். நாட்டின் வரலாற்று சாதனை உங்களுக்கு ஜோக் செய்கிற விஷயமா என கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில் சந்திரயான் 3 திட்டத்தை கேலி செய்யும் விதமாக கார்டூன் வெளியிட்டதாக கூறிற்காக கர்நாடகாவின் பகல்கோட் மாவட்ட போலீஸ் ஸ்டேஷனில் பிரகாஷ் ராஜிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து அமைப்புக்களைச் சேர்ந்த தலைவர்கள் அளித்த புகாரின் பேரில் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்