சென்னை: நான் இந்தத் திரைப்படத்தில் நடிக்கவில்லை. இந்தத் தகவல் எங்கிருந்து கிளம்பியது என்றே எனக்குத் தெரியவில்லை. ராமாயணா திரைப்படத்தின் ஒரு பகுதியாக நான் இல்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி பான் இந்தியா அளவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் விஜய் சேதுபதி. தற்போது டிரெய்ன், ஸ்லம்டாக், 33 டெம்பிள் ரோடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்புவின் அரசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்தியில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட அளவில் உருவாகி வரும் ராமாயணா படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப்போவதாக தகவல்கள் பரவிய வந்தது.

இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. முதல் பாகம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ், சன்னி தியோல், ரவி துபே ஆகியோர் நடிக்கின்றனர். பிரம்மாண்டத் திரைப்படமான 'ராமாயணா' குறித்த வதந்திகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள விஜய் சேதுபதி, இச்செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் இந்தத் திரைப்படத்தில் நடிக்கவில்லை. இந்தத் தகவல் எங்கிருந்து கிளம்பியது என்றே எனக்குத் தெரியவில்லை. ராமாயணா திரைப்படத்தின் ஒரு பகுதியாக நான் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}