தலித் ஊழியரை பொய் வழக்கில் சிக்க வைத்ததாக.. இன்போசிஸ் இணை நிறுவனர் உள்ளிட்டோர் மீது வழக்கு

Jan 28, 2025,06:10 PM IST

பெங்களூரு:  இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றி வந்த, தலித் வகுப்பைச் சேர்ந்த  ஊழியரை பொய்யான வழக்கில் சிக்க வைத்ததாக எழுந்த புகாரின் பேரில் இன்போசிஸ் இணை நிறுவனர் கிறிஸ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 18 பேர் மீது பெங்களூரு போலீஸார் எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கிறிஸ் கோபாலகிருஷ்ணன் தவிர வழக்குத் தொடரப்பட்டுள்ள மற்றவர்கள் விவரம் - முன்னாள் இந்திய அறிவியல் கழக இயக்குநர் பலராம், கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியர், சந்தியா விஸ்வநாத், ஹரி கே வி எஸ், தாசப்பா, பி. பலராம், ஹேமலதா மகிஷி, சட்டோபாத்யாயா, பிரதீப் சவ்கர், மனோகரன் உள்ளிட்டோர்.


என்ன பிரச்சினை?




துர்கப்பா என்பவர் இந்திய அறிவியல் கழகத்தின் மாற்று எரிபொருள் தொழில்நுட்ப மையத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த போவி சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் மீது கடந்த 2014ம் ஆண்டு பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்டதாக ஒரு புகார் எழுந்தது. இதையடுத்து அவர் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்த நிலையில் தன் மீது பொய்யான புகாரைச் சுமத்தியதாகவும், ஜாதிப் பெயரைச் சொல்லி அவமானப்படுத்தியதாகவும், மிரட்டியதாகவும் கூறி  சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.


வழக்கை விசாரித்த கோர்ட், புகாரில் முகாந்திரம் இருப்பதாக கூறி இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சதாசிவ நகர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது.  இதையடுத்து தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


கிறிஸ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் கழகத்தின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வானிலை கொடுத்த அப்டேட்.. இன்றும், நாளையும் எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?

news

மதுரையின் வளர்ச்சிக்கு போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெரிவோம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!

news

அரசியல் கட்சிகளுக்கான SOP ரெடி.. உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு அரசு!

news

திமுக அரசு ₹4,000 கோடியில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்கிறது: அண்ணாமலை

news

பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்: செல்வப்பெருந்தகை!

news

17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்

news

மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்கிறது திமுக அரசு –அன்புமணி ராமதாஸ் வேதனை

news

சமூக வலைதளங்களில் இளையராஜா படத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதி மன்றம்

news

மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்