பெங்களூரு: இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றி வந்த, தலித் வகுப்பைச் சேர்ந்த ஊழியரை பொய்யான வழக்கில் சிக்க வைத்ததாக எழுந்த புகாரின் பேரில் இன்போசிஸ் இணை நிறுவனர் கிறிஸ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 18 பேர் மீது பெங்களூரு போலீஸார் எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கிறிஸ் கோபாலகிருஷ்ணன் தவிர வழக்குத் தொடரப்பட்டுள்ள மற்றவர்கள் விவரம் - முன்னாள் இந்திய அறிவியல் கழக இயக்குநர் பலராம், கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியர், சந்தியா விஸ்வநாத், ஹரி கே வி எஸ், தாசப்பா, பி. பலராம், ஹேமலதா மகிஷி, சட்டோபாத்யாயா, பிரதீப் சவ்கர், மனோகரன் உள்ளிட்டோர்.
என்ன பிரச்சினை?

துர்கப்பா என்பவர் இந்திய அறிவியல் கழகத்தின் மாற்று எரிபொருள் தொழில்நுட்ப மையத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த போவி சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் மீது கடந்த 2014ம் ஆண்டு பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்டதாக ஒரு புகார் எழுந்தது. இதையடுத்து அவர் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்த நிலையில் தன் மீது பொய்யான புகாரைச் சுமத்தியதாகவும், ஜாதிப் பெயரைச் சொல்லி அவமானப்படுத்தியதாகவும், மிரட்டியதாகவும் கூறி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த கோர்ட், புகாரில் முகாந்திரம் இருப்பதாக கூறி இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சதாசிவ நகர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் கழகத்தின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
முன்னாள் புயல் டிட்வா.. இன்னும் சில நாட்கள் கடலோரமாகவே சுத்திருட்டிருக்குமாம்.. மழை நீடிக்கும்!
டெல்டா மாவட்டங்களை உலுக்கிய டிட்வா புயல். கனமழையால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!
நடிகை சமந்தா ரகசிய திருமணம்...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
திமுக ஆட்சியில் கொலை, கொள்ளைக்கு பஞ்சமே இல்லை... உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை: அன்புமணி
கிளைமேட்டே மாறிப் போச்சு.. ஓவரா வேற குளிருது.. சூடா கற்பூரவல்லி இஞ்சி டீ குடிப்போமா?
சுயநலவாதி...துரோகி...கோபியில் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்
குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது...எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்
{{comments.comment}}