பெங்களூரு: இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றி வந்த, தலித் வகுப்பைச் சேர்ந்த ஊழியரை பொய்யான வழக்கில் சிக்க வைத்ததாக எழுந்த புகாரின் பேரில் இன்போசிஸ் இணை நிறுவனர் கிறிஸ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 18 பேர் மீது பெங்களூரு போலீஸார் எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கிறிஸ் கோபாலகிருஷ்ணன் தவிர வழக்குத் தொடரப்பட்டுள்ள மற்றவர்கள் விவரம் - முன்னாள் இந்திய அறிவியல் கழக இயக்குநர் பலராம், கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியர், சந்தியா விஸ்வநாத், ஹரி கே வி எஸ், தாசப்பா, பி. பலராம், ஹேமலதா மகிஷி, சட்டோபாத்யாயா, பிரதீப் சவ்கர், மனோகரன் உள்ளிட்டோர்.
என்ன பிரச்சினை?
துர்கப்பா என்பவர் இந்திய அறிவியல் கழகத்தின் மாற்று எரிபொருள் தொழில்நுட்ப மையத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த போவி சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் மீது கடந்த 2014ம் ஆண்டு பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்டதாக ஒரு புகார் எழுந்தது. இதையடுத்து அவர் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்த நிலையில் தன் மீது பொய்யான புகாரைச் சுமத்தியதாகவும், ஜாதிப் பெயரைச் சொல்லி அவமானப்படுத்தியதாகவும், மிரட்டியதாகவும் கூறி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த கோர்ட், புகாரில் முகாந்திரம் இருப்பதாக கூறி இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சதாசிவ நகர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் கழகத்தின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்டு.. தரையில் கிடத்தி.. அமெரிக்க விமான நிலையத்தில் அராஜகம்
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}