பெங்களூரு: இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றி வந்த, தலித் வகுப்பைச் சேர்ந்த ஊழியரை பொய்யான வழக்கில் சிக்க வைத்ததாக எழுந்த புகாரின் பேரில் இன்போசிஸ் இணை நிறுவனர் கிறிஸ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 18 பேர் மீது பெங்களூரு போலீஸார் எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கிறிஸ் கோபாலகிருஷ்ணன் தவிர வழக்குத் தொடரப்பட்டுள்ள மற்றவர்கள் விவரம் - முன்னாள் இந்திய அறிவியல் கழக இயக்குநர் பலராம், கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியர், சந்தியா விஸ்வநாத், ஹரி கே வி எஸ், தாசப்பா, பி. பலராம், ஹேமலதா மகிஷி, சட்டோபாத்யாயா, பிரதீப் சவ்கர், மனோகரன் உள்ளிட்டோர்.
என்ன பிரச்சினை?

துர்கப்பா என்பவர் இந்திய அறிவியல் கழகத்தின் மாற்று எரிபொருள் தொழில்நுட்ப மையத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த போவி சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் மீது கடந்த 2014ம் ஆண்டு பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்டதாக ஒரு புகார் எழுந்தது. இதையடுத்து அவர் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்த நிலையில் தன் மீது பொய்யான புகாரைச் சுமத்தியதாகவும், ஜாதிப் பெயரைச் சொல்லி அவமானப்படுத்தியதாகவும், மிரட்டியதாகவும் கூறி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த கோர்ட், புகாரில் முகாந்திரம் இருப்பதாக கூறி இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சதாசிவ நகர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் கழகத்தின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!
தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து
திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!
சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!
திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்
{{comments.comment}}