தொண்டர் உயிரிழந்த சம்பவம்... ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிவு!

Jun 23, 2025,02:33 PM IST

குண்டூர்:  டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த நிலையில், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டபல்லா கிராமத்தை சேர்ந்த ஓய்.எஸ்.ஆர்.சி.பி தொண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக ஜெகன்மோகன் ரெட்டி நேற்று நேரில் வந்தார். அப்போது ஜெகன்மோகன் ரெட்டி காரை தொடர்ந்து தொண்டர்கள் கூட்டத்தில், செவி சிங்கையா (55) என்பவர் தவறி விழுந்து, கார் சக்கரத்தில் சிக்கினார்.




இதனையடுத்து சிங்கையாவை போலீசாரும்,  ஓய்.எஸ்.ஆர்.சி.பி ஆதரவாளர்களும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே சிங்கையா உயிரிழந்தார். இந்த நிலையில், சிங்கையா ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கியதும், இந்த சம்பவத்தை கவனிக்காமல் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி தொண்டர்களை பார்த்து கையை அசைத்த  வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது.


இந்நிலையில், உயிரிழந்த தொண்டரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில்,  ஜெகன்மோகன் ரெட்டி, கார் ஓட்டுநர் ரமணா ரெட்டி, முன்னாள் எம்பி சுப்பா ரெட்டி உள்பட 6 பேர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!

news

ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?

news

பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

news

கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்

news

திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!

news

இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!

news

பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்