குண்டூர்: டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த நிலையில், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டபல்லா கிராமத்தை சேர்ந்த ஓய்.எஸ்.ஆர்.சி.பி தொண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக ஜெகன்மோகன் ரெட்டி நேற்று நேரில் வந்தார். அப்போது ஜெகன்மோகன் ரெட்டி காரை தொடர்ந்து தொண்டர்கள் கூட்டத்தில், செவி சிங்கையா (55) என்பவர் தவறி விழுந்து, கார் சக்கரத்தில் சிக்கினார்.

இதனையடுத்து சிங்கையாவை போலீசாரும், ஓய்.எஸ்.ஆர்.சி.பி ஆதரவாளர்களும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே சிங்கையா உயிரிழந்தார். இந்த நிலையில், சிங்கையா ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கியதும், இந்த சம்பவத்தை கவனிக்காமல் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி தொண்டர்களை பார்த்து கையை அசைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது.
இந்நிலையில், உயிரிழந்த தொண்டரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், ஜெகன்மோகன் ரெட்டி, கார் ஓட்டுநர் ரமணா ரெட்டி, முன்னாள் எம்பி சுப்பா ரெட்டி உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!
{{comments.comment}}