குண்டூர்: டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த நிலையில், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டபல்லா கிராமத்தை சேர்ந்த ஓய்.எஸ்.ஆர்.சி.பி தொண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக ஜெகன்மோகன் ரெட்டி நேற்று நேரில் வந்தார். அப்போது ஜெகன்மோகன் ரெட்டி காரை தொடர்ந்து தொண்டர்கள் கூட்டத்தில், செவி சிங்கையா (55) என்பவர் தவறி விழுந்து, கார் சக்கரத்தில் சிக்கினார்.
இதனையடுத்து சிங்கையாவை போலீசாரும், ஓய்.எஸ்.ஆர்.சி.பி ஆதரவாளர்களும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே சிங்கையா உயிரிழந்தார். இந்த நிலையில், சிங்கையா ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கியதும், இந்த சம்பவத்தை கவனிக்காமல் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி தொண்டர்களை பார்த்து கையை அசைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது.
இந்நிலையில், உயிரிழந்த தொண்டரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், ஜெகன்மோகன் ரெட்டி, கார் ஓட்டுநர் ரமணா ரெட்டி, முன்னாள் எம்பி சுப்பா ரெட்டி உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்.. மதுரை உள்பட 9 மாவட்ட கலெக்டர்களும் இடமாற்றம்!
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்... நடிகர் ஸ்ரீகாந்த் கைது!
4 மாநில சட்டசபை இடைத்தேர்தல் முடிவு : பாஜகவுக்குப் பின்னடைவு.. துளிர்த்த ஆம் ஆத்மி, காங்கிரஸ்!
சூர்யா 45 படத்தின் கதை என்னவா இருக்கும்.. கருப்பு டைட்டிலை இப்போதே கொண்டாடும் ரசிகர்கள்!
ரூ. 100 கோடியைத் தாண்ட தடுமாறும் தக்லைப்.. கர்நாடக குழப்பத்தால் ஏற்பட்ட ரூ. 30 கோடி நஷ்டம்!
என்னாது... 2026ல் மேற்குவங்க முதல்வர் ஆகப் போகிறாரா செளரவ் கங்குலியா?
வால்பாறையில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை: தேர்தல் ஆணையம்
தொண்டர் உயிரிழந்த சம்பவம்... ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிவு!
பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது அதிமுக: அமைச்சர் சேகர்பாபு
{{comments.comment}}