சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் பெரியார் குறித்த விமர்சனத்திற்கு எதிராக, பெரியாரிய அமைப்பினர் சீமானின் வீட்டை முற்றுகையிட முயன்ற போது சீமானின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டு முன்பு உருட்டு கட்டையுடன் திரண்டதால், சீமான் மற்றும் சீமான் ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி கடுமையாக பேசியிருந்தார் இதனால் பெரியார் அமைப்பாளர்கள் சீமானின் நாகரீகமற்ற பேச்சிற்கு ஆதாரம் கேட்டு கடந்த 22 ஆம் தேதி அவரது வீட்டை முற்றுகையிட இருப்பதாக அறிவித்திருந்தனர்.

இந்த அறிவிப்பின்படி நேற்று முன்தினம் பெரியாரின் திக, திவிக மற்றும் மே 17 இயக்கங்கள் கொண்ட அமைப்பினர் சீமானின் வீட்டை முற்றுகையிட முயன்று ஒன்று திரண்டனர். அப்போது சீமானின் உருவ பொம்மையை எரித்து தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதனால் பாதுகாப்பு கருதி 700 க்கும் மேற்பட்ட போலீசார் சீமானின் வீட்டு முன்பு குவிந்தனர். போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறியும் சிலர் சீமானின் வீட்டிற்குள் செல்ல முயன்றதால் அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். அதற்கு முன்னதாக சீமானின் ஆதரவாளர்கள் பெரியார் அமைப்பினரை தாக்க உருட்டு கட்டையுடன் அப்பகுதியில் இருந்ததால் பதற்றம் நிலவியது.
தற்போது போராட்டக்காரர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல தற்போது சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சீமானுக்கு ஆதரவாக அவரது வீட்டில் உருட்டு கட்டையுடன் வந்த 150 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் மீது போலீசார் மிரட்டுதல் ,சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சீமானுக்குப் பாதுகாப்பு தருவதற்காக ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் சீமான் வீட்டின் முன்பு திரண்டிருந்தனர். அதில் பலர் கையில் உருட்டுக்கட்டையுடனும் இருந்தனர். அவர்களுக்கு சீமான் வீட்டிலேயே பிரியாணி சமைத்துப் போடப்பட்டது. தொண்டர்களுடன் சேர்ந்து சீமான், அவரது மனைவி கயல்விழி உள்ளிட்டோரும் பிரியாணி சாப்பிட்டனர். அவர்களில் பலர் பாட்டும் பாடி வீடே களை கட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}