கேஷ் ஆப் நிறுவனர் பாப் லீ கத்தியால் குத்திக் கொலை.. சான் பிரான்சிஸ்கோவில் பயங்கரம்

Apr 06, 2023,10:49 AM IST
சான்பிரான்சிஸ்கோ:  கேஷ் ஆப் என்ற மொபைல் கட்டணம் செலுத்தும் ஆப்பை உருவாக்கியவரான பாப் லீ கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். சான்பிரான்சிஸ்கோவில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.35 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு நபர் கத்தியால்  குத்தப்பட்ட நிலையில் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பாப் லீயை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



அதன் பின்னர் நடந்த விசாரணையில்தான் இறந்தவர் பாப் லீ என்று தெரியவந்தது.  பாப் லீ தற்போது கிரிப்டோ கரன்சி நிறுவனமான மொபைல்காய்ன் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக இருந்து வந்தார்.  பாப் லீயைக் கொன்றது யார் என்று தெரியவில்லை. இதுவரை அதுகுறித்த தகவல்களை போலீஸார் வெளியிடவில்லை.

பாப் லீ மிகவும் நல்ல மனிதர் என்று அவரது நிறுவன ஊழியர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்பு கூகுள் நிறுவனத்திலும் பாப் லீ வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்