கேஷ் ஆப் நிறுவனர் பாப் லீ கத்தியால் குத்திக் கொலை.. சான் பிரான்சிஸ்கோவில் பயங்கரம்

Apr 06, 2023,10:49 AM IST
சான்பிரான்சிஸ்கோ:  கேஷ் ஆப் என்ற மொபைல் கட்டணம் செலுத்தும் ஆப்பை உருவாக்கியவரான பாப் லீ கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். சான்பிரான்சிஸ்கோவில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.35 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு நபர் கத்தியால்  குத்தப்பட்ட நிலையில் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பாப் லீயை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



அதன் பின்னர் நடந்த விசாரணையில்தான் இறந்தவர் பாப் லீ என்று தெரியவந்தது.  பாப் லீ தற்போது கிரிப்டோ கரன்சி நிறுவனமான மொபைல்காய்ன் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக இருந்து வந்தார்.  பாப் லீயைக் கொன்றது யார் என்று தெரியவில்லை. இதுவரை அதுகுறித்த தகவல்களை போலீஸார் வெளியிடவில்லை.

பாப் லீ மிகவும் நல்ல மனிதர் என்று அவரது நிறுவன ஊழியர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்பு கூகுள் நிறுவனத்திலும் பாப் லீ வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்