சென்னை: நடிகர் விஷாலின் தங்கை கணவரான பிரபல நகைக்கடை அதிபர் உம்மிடி கிரிட்டிஷ் மீது வங்கி கடன் மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா ரெட்டிக்கும் பிரபல நகைக்கடை உரிமையாளர் உம்மிடி கிரிட்டிஷுக்கும் திருமணம் நடைபெற்றது.
நடிகர் விஷாலின் தங்கை கணவர் கடந்த ஆண்டு சென்னை ஐயப்பன் தாங்கல் எஸ்பிஐ வங்கிக் கிளையில் போலியான ஆவணங்கள் மூலம் சுமார் 5.5 கோடி ரூபாய் கடன் பெற உடந்தையாக இருந்ததாக கூறி சிபிஐக்கு புகார் வந்தது. உம்மிடி கிரிட்டிஷ் தவிர வங்கி அதிகாரிகள் உள்பட பலர் மீதும் புகார் கூறப்பட்டது. ஆனால் இதுதொடர்பான மேல் நடவடிக்கை ஏதும் இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உம்மிடி கிரிட்டிஷ் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. நில உரிமையாளர், கட்டுமான நிறுவன அதிபர், வங்கி அதிகாரிகள், கடன் வாங்கியவர்கள் என மொத்தம் ஏழு பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மிகப் பெரிய பாரம்பரியமான நகைத் தயாரிப்பாளர்களில் உம்மிடி பங்காரு செட்டிக்கு முக்கிய இடம் உண்டு. வேலூர் அருகே சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவரான உம்மிடி பங்காரு செட்டி நகைத் தொழிலில் சிறந்து விளங்கினார். சிறிய அளவில் தொழில் செய்து வந்த அவர் சென்னைக்கு இடம் பெயர்ந்த பின்னர் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டார். 123 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது முதல் நகைக் கடை கோவிந்தப்பன் நாயக்கன் தெருவில் தொடங்கப்பட்டது.
நமது நாடு சுதந்திரமடைந்தபோது மவுன்ட்பேட்டனிடம் கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட செங்கோலை, உம்மிடி பங்காரு செட்டி நிறுவனம்தான் தயாரித்துக் கொடுத்தது. திருவாவடுதுறை ஆதீனத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த செங்கோலை அவர்கள் தயாரித்துக் கொடுத்தனர். இந்த செங்கோல்தான் தற்போது புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செங்கோலைத் தயாரித்துக் கொடுத்த பாரம்பரியமான குடும்பத்தின் 5வது தலைமுறை நகைத் தொழில் அதிபர்தான் உம்மிடி கிரிட்டிஷ் என்பது குறிப்பிட்டத்தக்கது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}