வங்கிக் கடன் மோசடி.. நடிகர் விஷால் தங்கை கணவர் உம்மிடி கிரிட்டிஷ் மீது.. சிபிஐ வழக்கு

Mar 21, 2025,12:23 PM IST

சென்னை: நடிகர் விஷாலின் தங்கை கணவரான பிரபல நகைக்கடை அதிபர் உம்மிடி கிரிட்டிஷ் மீது வங்கி கடன் மோசடி தொடர்பாக  சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. 


கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா ரெட்டிக்கும் பிரபல நகைக்கடை உரிமையாளர் உம்மிடி கிரிட்டிஷுக்கும்  திருமணம் நடைபெற்றது.


நடிகர் விஷாலின் தங்கை கணவர் கடந்த ஆண்டு சென்னை ஐயப்பன் தாங்கல் எஸ்பிஐ  வங்கிக் கிளையில் போலியான ஆவணங்கள் மூலம் சுமார் 5.5 கோடி ரூபாய் கடன் பெற உடந்தையாக இருந்ததாக கூறி சிபிஐக்கு புகார் வந்தது. உம்மிடி கிரிட்டிஷ் தவிர வங்கி அதிகாரிகள் உள்பட பலர் மீதும் புகார் கூறப்பட்டது. ஆனால் இதுதொடர்பான மேல் நடவடிக்கை ஏதும் இல்லாமல் இருந்து வந்தது.


இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்  உம்மிடி கிரிட்டிஷ்  மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. நில உரிமையாளர், கட்டுமான நிறுவன அதிபர், வங்கி அதிகாரிகள், கடன் வாங்கியவர்கள் என மொத்தம் ஏழு பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.




தமிழ்நாட்டின் மிகப் பெரிய பாரம்பரியமான நகைத் தயாரிப்பாளர்களில் உம்மிடி பங்காரு செட்டிக்கு முக்கிய இடம் உண்டு. வேலூர் அருகே சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவரான உம்மிடி பங்காரு செட்டி நகைத் தொழிலில் சிறந்து விளங்கினார். சிறிய அளவில் தொழில் செய்து வந்த அவர் சென்னைக்கு இடம் பெயர்ந்த பின்னர் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டார். 123 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது முதல் நகைக் கடை கோவிந்தப்பன் நாயக்கன் தெருவில் தொடங்கப்பட்டது.


நமது நாடு சுதந்திரமடைந்தபோது மவுன்ட்பேட்டனிடம் கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட செங்கோலை, உம்மிடி பங்காரு செட்டி நிறுவனம்தான் தயாரித்துக் கொடுத்தது. திருவாவடுதுறை ஆதீனத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த செங்கோலை அவர்கள் தயாரித்துக் கொடுத்தனர். இந்த செங்கோல்தான் தற்போது புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செங்கோலைத் தயாரித்துக் கொடுத்த பாரம்பரியமான குடும்பத்தின் 5வது தலைமுறை நகைத் தொழில் அதிபர்தான் உம்மிடி கிரிட்டிஷ் என்பது குறிப்பிட்டத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்