பாலியல் புகாருக்குள்ளான 3 பேராசிரியர்களும் டிஸ்மிஸ்.. கலாஷேத்திரா பவுண்டேஷன் தகவல்

Apr 04, 2023,09:50 AM IST
சென்னை: பாலியல் புகாருக்குள்ளான உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள. புகாரில் சிக்கிய மற்ற மூன்று பேரான சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரும் டிஸ்மிஸ் செய்யப்படுவர் என்று கலாஷேத்திரா பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

இன்னும் 2 நாட்களில் டிஸ்மிஸ் உத்தரவு எழுத்துப்பூர்வமாக வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளது.  ஆனால் எழுத்துப்பூர்வ உத்தரவைப் பார்த்தால் மட்டுமே தாங்கள் தேர்வுகளை எழுதப் போவதாக மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பாலியல் புகார் தொடர்பாக மாணவிகள் நடத்திய போராட்டம் எதிரொலியாக ஏப்ரல் 6ம் தேதி வரை ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் விவகாரத்தில் கல்லூரியின் இயக்குநரும், நடனத்துறை தலைவரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பலமுறை புகார்கள் கொடுத்தும் கூட உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் சார்பில் மத்திய கலாச்சாரத் துறைக்கு  கடிதம் எழுதப்பட்டது. இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால்தான் மாணவிகள் அதிரடியாக உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை தலையிட நேர்ந்தது. தேசிய மகளிர் ஆணையம் சரிவர நடவடிக்கை எடுக்காத காரணத்தால், மாநில மகளிர் ஆணையமும் தலையிட்டது. எழுத்துப்பூர்வமான புகார் வரப் பெற்றதும் காவல்துறை களத்தில் குதித்து தலைமறைவான உதவிப் பேராசிரியர் ஹரி பத்மனைக் கைது செய்தது.

சமீபத்திய செய்திகள்

news

India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!

news

SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

news

அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

news

SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்