பாலியல் புகாருக்குள்ளான 3 பேராசிரியர்களும் டிஸ்மிஸ்.. கலாஷேத்திரா பவுண்டேஷன் தகவல்

Apr 04, 2023,09:50 AM IST
சென்னை: பாலியல் புகாருக்குள்ளான உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள. புகாரில் சிக்கிய மற்ற மூன்று பேரான சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரும் டிஸ்மிஸ் செய்யப்படுவர் என்று கலாஷேத்திரா பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

இன்னும் 2 நாட்களில் டிஸ்மிஸ் உத்தரவு எழுத்துப்பூர்வமாக வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளது.  ஆனால் எழுத்துப்பூர்வ உத்தரவைப் பார்த்தால் மட்டுமே தாங்கள் தேர்வுகளை எழுதப் போவதாக மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பாலியல் புகார் தொடர்பாக மாணவிகள் நடத்திய போராட்டம் எதிரொலியாக ஏப்ரல் 6ம் தேதி வரை ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் விவகாரத்தில் கல்லூரியின் இயக்குநரும், நடனத்துறை தலைவரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பலமுறை புகார்கள் கொடுத்தும் கூட உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் சார்பில் மத்திய கலாச்சாரத் துறைக்கு  கடிதம் எழுதப்பட்டது. இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால்தான் மாணவிகள் அதிரடியாக உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை தலையிட நேர்ந்தது. தேசிய மகளிர் ஆணையம் சரிவர நடவடிக்கை எடுக்காத காரணத்தால், மாநில மகளிர் ஆணையமும் தலையிட்டது. எழுத்துப்பூர்வமான புகார் வரப் பெற்றதும் காவல்துறை களத்தில் குதித்து தலைமறைவான உதவிப் பேராசிரியர் ஹரி பத்மனைக் கைது செய்தது.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்கம் தீவிரவாத தாக்குதல்.. பிரதமர் மோடியுடன் அதிபர் புடின் பேச்சு.. இந்தியாவுக்கு ஆதரவு!

news

சபரிமலை செல்கிறார் குடியரசுத் தலைவர் முர்மு.. ஐயப்பனை தரிசிக்கப்போகும் முதல் ஜனாதிபதி!

news

செனாப் நதியின் 2 அணைகளிலிருந்து.. பாகிஸ்தான் செல்லும் தண்ணீரை.. நிறுத்தி வைத்தது இந்தியா

news

Gold rate: தங்கம் விலை ஸ்திரமற்றதாக இருக்கும்.. முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கவும்..!

news

குளத்தில் வட்ட இலையுடன் தாமரை மலரும்.. ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும்: தமிழிசை சௌந்தரராஜன்

news

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. காயத்தால் அவதிப்படும் பும்ரா.. புது வைஸ் கேப்டனாக வரப் போவது யாரு?

news

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிறைகளைத் தாக்க தீவிரவாதிகள் திட்டம்?.. பாதுகாப்பு அதிகரிப்பு!

news

வேற லெவல் சாட்ஜிபிடி.. ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி.. ஏ+ மார்க் வாங்கி அசத்திய ஆய்வு மாணவர்!

news

Cheating case: 78 வயது மூதாட்டியிடம் மோசடி.. 21 வயது இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது!

அதிகம் பார்க்கும் செய்திகள்