டெல்லி: வருடத்திற்கு ஒரு முறை ரூ.3000 செலுத்தினால் போதும், வருடம் முழுவதும் எந்த சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்த தேவையில்லை. இந்த புதிய திட்டம் மத்திய அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் குறித்து ஏகப்பட்ட புகார்கள், கோபங்கள், வருத்தங்கள், அதிருப்திகள் மக்களிடையே உள்ளன. அதிகமான டோல்கேட்கள் உள்ளன. அருகருகே உள்ளன, அதிக கட்டணம் கட்ட வேண்டியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அடிக்கடி சுங்கச்சாவடிகளில் பயணம் செய்பவர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தனிநபர் வாகன உரிமையாளர்கள் ரூ.3000 மட்டும் செலுத்தி விட்டு ஓராண்டிக்கான டோல்கேட் பாஸை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த ஓராண்டிற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் டோல்கேட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல கார் உரிமையாளர்கள் 15 ஆண்டுகளுக்கு ரூ.30 ஆயிரம் கட்டணமாக செலுத்திவிட்டு லைஃப் டைம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த புதிய திட்டம் தொடர்பாக தற்போது தீவிர ஆலோசனைகள் தொடங்க உள்ளன.
இது குறித்து பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், கார் உரிமையாளர்களுக்கு சுங்க கட்டண செலவை குறைப்பதற்காக பாஸ் நடைமுறையை கொண்டு வருவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும், ஓரண்டு மற்றும் 15 ஆண்டுகளுக்கான பாஸ்களை வழங்குவதன் மூலம் அரசுக்கு எந்த இழப்பீடும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இன்றைக்கு மழை வருமா வராதா? எங்கெல்லாம் மழை வரும்... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
எடப்பாடி பழனிச்சாமி தான் எங்கள் எதிரி.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒன்றிணைந்து பகிரங்க பேட்டி
கரூர் அதிர்ச்சியிலிருந்து மீண்டுட்டாரா விஜய்.. சிறப்பு பொதுக்குழுவால்.. தொண்டர்களிடையே உற்சாகம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
இந்தியாவில்.. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 லட்சம் பெண் பிரதிநிதிகள்.. பி.வில்சன் பெருமிதம்
திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி: நயினார் நகேந்திரன் வேதனை!
தேவர் ஜெயந்தி விழா... முத்துராமலிங்க தேவருக்கு மனமார்ந்த அஞ்சலி: பிரதமர் மோடியின் பதிவு!
சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா முத்துராமலிங்கத் தேவர்: விஜய்
கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது திமுக அரசு: அண்ணாமலை
{{comments.comment}}