மராத்தி, பெங்காலி உள்பட மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து.. வழங்கியது மத்திய அரசு

Oct 04, 2024,01:33 PM IST

டெல்லி:   தமிழ் உள்ளிட்ட 6 இந்திய மொழிகளுக்கு ஏற்கனவே செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 5 மொழிகளுக்கு அந்த அந்தஸ்து தரப்பட்டுள்ளது.


இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அதில் 2001 ஆம் ஆண்டு கணக்கின்படி 29 மொழிகளை பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் 122 மொழிகளை அதிகமான மக்கள் பேசுகின்றனர். இந்தி, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, பஞ்சாபி, போன்ற மொழிகள் வட மாநிலங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், போன்ற மொழிகள் தென்னிந்திய மக்களால் பேசப்பட்டு வருகிறது. இந்த மொழிகள் தென்னிந்தியாவில் முக்கிய பங்கு வகிக்கிறது.




இந்திய மொழிகளிலேயே மிகவும் பழமையான தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தர வேண்டும் என்று மறைந்த கலைஞர் கருணாநிதி காலத்தில் தீவிரமாக எடுத்த முயற்சியின் விளைவாக  அப்போதைய காங்கிரஸ் அரசு தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது. அதைத் தொடர்ந்து சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கும் படிப்படியாக செம்மொழி அந்தஸ்து தரப்பட்டது. தற்போது மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து தரப்பட்டுள்ளது.


அக்டோபர் 3ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்ட்டது. இந்திய மொழிகளை பாதுகாத்து மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.  மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமிஸ், பெங்காலி என மேலும் ஐந்து மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி உள்ளது மத்திய அரசு.


மராத்தி மொழி மகாராஷ்டிராவின் பெரும்பான்மை மொழியாகும். விரைவில் மகாராஷ்டிராவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு மராத்தி மொழி பேசுவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும்.. தவெக தலைவர் விஜய் பேச்சு

news

மக்கள் முக்கியமில்லை...பதவி தான் முக்கியம்...விஜய்யை விளாசிய டி.கே. எஸ். இளங்கோவன்

news

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்ட மதுரை கலெக்டர்

news

செங்கோட்டையன் செல்லாக்காசு.. யாருமே ஏற்றுக் கொள்ளாததால் தவெகவுக்கு சென்றுள்ளார்: செல்லூர் ராஜூ

news

அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும்... தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

பாஜக எச்.ராஜா எப்படி இருக்கிறார்? அடுத்தடுத்து நலம் விசாரிக்கும் தலைவர்கள்

news

823 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயமா பிப்ரவரி 2026? – ஒரு சுவாரஸ்யமான அலசல்

news

மாம்பழ சின்னம் யாருக்கு?...பாமக வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

news

ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் கட்?.. ஏன் இப்படி வதந்தி பரப்பறீங்க.. தனஞ்செயன் ஆதங்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்