கவர்மென்ட் நடத்தறீங்களா.. இல்லை.. கந்து வட்டி நடத்தறீங்களா.. சீமான் ஆவேச கேள்வி!

Jan 05, 2024,04:51 PM IST

சென்னை: மாநிலங்கள்தான் மத்திய அரசுக்கு நிதி ஈட்டித் தருகின்றன. மத்திய அரசு தனியாக நிதி ஈட்டுவதில்லை. அப்படி இருக்கும்போது மாநிலங்கள் பேரிடர் காலத்தில் சிரமப்படும்போது நிதி தருவதில் பாரபட்சம் காட்டுவது ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார்.


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் வெள்ள பாதிப்பைப் பார்வையிட தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். மேலும் அதற்கு முன்பு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். அப்போது, தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரியை விட மத்திய அரசு கூடுதலாக நிதியை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார். 


2014 முதல் 2023 வரை தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி, அதே நேரம் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி என்று தமிழகத்தில் இருந்து பெற்றதை விட கூடுதலாக நிதி கொடுத்துள்ளோம் என்று கூறியிருந்தார். அவருக்கு பதில் கூறும் பொருட்டு இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்தார்.




அப்போது அவர் கூறுகையில்,  கவர்மெண்ட் நடத்துறீங்களா.. இல்லை கந்து வட்டி நடத்துறீங்களா? என் வரியை எடுத்துட்டு போயிட்டு ஏன் திருப்பி தர்றே, மாநிலங்களின் நிதி தான் மத்திய அரசு நிதி. எனக்கு ஒரே தாய் தமிழ் தாய். என் நாடு என் மக்கள் என் நிர்வாகம். இதே குஜராத்திலும்,  உத்தர பிரதேசத்திலும் வெள்ளம்  வந்தால்  கேவலமா இப்படியா பேசிட்டு உட்கார்ந்திருப்பீர்கள். உடனே வருவீங்க பறந்து வருவீங்க. அடுத்த நொடி 500 கோடி அறிவிப்பீங்க. அறிவிச்சீங்களா?  இல்லையா? 


நான் ஒரு ரூபாய் கொடுத்தா 40 காசு திருப்பி தருகிறீர்கள். அவன் ஒரு ரூபாய் கொடுத்தால் 3.80 காசு தருகிறார்கள். என் நிலத்தின்  வளத்தை எல்லாவற்றையும் சுரண்டி விட்டீர்கள். இந்தி பேசுபவர்கள் தான் இந்தியர்களா?


பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வந்த அம்மா அவர்கள், சாலையில் ஒரு ஓரத்துல படங்கள் எடுத்துட்டு வந்து அந்த படங்களை பெரிய அளவில் மாட்டி, ஒரு பந்தலை போட்டு அதில் இருந்து பார்த்துட்டுப் போறதுக்கு, அங்கிருந்து வாட்ஸ் அப்பில் அனுப்பி விட்டு இருக்க சொல்லி இருக்கலாமே. எதுக்கு வர்ரீங்க. இதுதான் அவரும் பண்ணாரு. ஒரு இடத்துல படத்தை ஒட்டி வச்சிருந்தாங்க. அவரும் பார்த்துட்டு போயிட்டாரு.


ஈமெயில், இன்ஸ்டாகிராம் இருக்கு, இன்டர்நெட் இருக்கு, வாட்ஸ் அப் இருக்கு. அதுல போட்டு விட சொல்லி பார்க்க வேண்டியது தானே. அங்கிருந்து பார்க்கலாமே. அவங்களுக்கு நாங்க ஒரு உயிரே கிடையாது. நாங்க ஒரு  ஓட்டு அவ்வளவுதான். 


திருச்சி விமான நிலைய விரிவாக்கத்தை திறந்து வச்சுட்டு போனாரு. புதிய முனையத்தை திறந்து வைக்க வர முடிந்த பிரதமர் மோடிக்கு தூத்துக்குடிக்கு வர முடியல. தூத்துக்குடி அழிந்து போனதை பார்வையிட முடியல. மக்களுக்காக தான் இந்த  விமான நிலைய விரிவாக்கம்.  மக்கள் செத்துப் போனதுக்கப்புறம் யாரு அதை பயன்படுத்த முடியும் என்று  கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்