Cyclone Fengal: தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 944.80 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

Dec 06, 2024,10:16 PM IST

டெல்லி: தமிழ்நாட்டுக்கு, மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 944.80 கோடியை மத்திய உள்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.


தமிழ்நாட்டில் சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் தாக்கி பேரிடரை சந்தித்தது நமது மாநிலம். விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. பல ஆறுகள் வெள்ளப் பெருக்கை சந்தித்து ஊருக்குள் புகுந்து மக்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்தன. பெரும் பொருட் சேதத்தையும், பல உயிரிழப்புகளையும் தமிழ்நாடு சந்தித்தது.


இதையடுத்து தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ. 2000 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார். பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். நாளை முதல் மத்திய குழு வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடவுள்ளது.




இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 944.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய குழு ஆய்வுக்குப் பின்னர் மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் உள்துறை தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் மற்றும் பெரு வெள்ள பாதிப்பின்போதும் தமிழ்நாடு நிதியுதவி கோரியிருந்தது. பிரதமரையும், இதுதொடர்பாக முதல்வர் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். இருப்பினும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த நிலையில் மத்திய குழு வருவதற்கு முன்பே கணிசமான தொகுதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை

news

தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!

news

தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?

news

தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்

news

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

news

கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

news

எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்