டெல்லி: தமிழ்நாட்டுக்கு, மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 944.80 கோடியை மத்திய உள்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் தாக்கி பேரிடரை சந்தித்தது நமது மாநிலம். விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. பல ஆறுகள் வெள்ளப் பெருக்கை சந்தித்து ஊருக்குள் புகுந்து மக்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்தன. பெரும் பொருட் சேதத்தையும், பல உயிரிழப்புகளையும் தமிழ்நாடு சந்தித்தது.
இதையடுத்து தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ. 2000 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார். பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். நாளை முதல் மத்திய குழு வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடவுள்ளது.

இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 944.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய குழு ஆய்வுக்குப் பின்னர் மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் உள்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் மற்றும் பெரு வெள்ள பாதிப்பின்போதும் தமிழ்நாடு நிதியுதவி கோரியிருந்தது. பிரதமரையும், இதுதொடர்பாக முதல்வர் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். இருப்பினும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த நிலையில் மத்திய குழு வருவதற்கு முன்பே கணிசமான தொகுதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?
முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?
இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இசைஞானி என்னும் இசைத்தோணி!
Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)
பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்
இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து
கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!
{{comments.comment}}