டெல்லி: தமிழ்நாட்டுக்கு, மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 944.80 கோடியை மத்திய உள்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் தாக்கி பேரிடரை சந்தித்தது நமது மாநிலம். விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. பல ஆறுகள் வெள்ளப் பெருக்கை சந்தித்து ஊருக்குள் புகுந்து மக்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்தன. பெரும் பொருட் சேதத்தையும், பல உயிரிழப்புகளையும் தமிழ்நாடு சந்தித்தது.
இதையடுத்து தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ. 2000 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார். பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். நாளை முதல் மத்திய குழு வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடவுள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 944.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய குழு ஆய்வுக்குப் பின்னர் மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் உள்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் மற்றும் பெரு வெள்ள பாதிப்பின்போதும் தமிழ்நாடு நிதியுதவி கோரியிருந்தது. பிரதமரையும், இதுதொடர்பாக முதல்வர் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். இருப்பினும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த நிலையில் மத்திய குழு வருவதற்கு முன்பே கணிசமான தொகுதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில்.. மே மாத இறுதியில் கோடை வெயில்.. இயல்பை விட குறையும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
தமிழகத்தில் 10வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. வழக்கம் போல மாணவியரே அதிகம் பாஸ்!
பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!
என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு
cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்
இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!
தொழிற்சாலையில் டேங்க் வெடிப்பு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!
{{comments.comment}}