டெல்லி: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. அப்போது ஜாதி வாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
காங்கிரஸ், திமுக, பாமக உள்ளிட்ட நாட்டின் அனைத்து முக்கியக் கட்சிகளும் இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் மத்திய அரசு இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வரவிருக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு சேர்க்கப்படும் என்று அறிவித்துள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதை தெரிவித்துள்ளார். CCPA எனப்படும் மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரங்களுக்கான குழு, சாதிவாரி கணக்கெடுப்பை சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்படும். காங்கிரஸ் மற்றும் அதன் INDIA கூட்டணி சாதிவாரி கணக்கெடுப்பை அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றன. சமூகத்தில் குழப்பம் ஏற்படாதவாறு, கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு வெளிப்படையாக சேர்க்கப்பட வேண்டும்.
சில மாநிலங்கள் சாதிகளை எண்ணுவதற்கு ஆய்வுகள் நடத்தியுள்ளன. சில மாநிலங்கள் இதைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், வேறு சில மாநிலங்கள் அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமே வெளிப்படையற்ற முறையில் ஆய்வுகளை நடத்தின தற்போது மத்திய அரசே இதை நடத்தப் போவதால் மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தத் தேவையில்லை என்றார் அவர்.
இந்தியாவில் கடைசியாக முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இல் நடத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு COVID-19 தொற்றுநோய் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த முடிவு பல அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எடுக்கப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு மூலம், எந்தெந்த சமூகங்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து திட்டங்களை வகுக்க முடியும் என்று நம்பப்படுகிறது. இதனால், சமூகத்தில் சமத்துவம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}