டெல்லி : சந்திரயான் 3, வெற்றிகரமாக நிலவின் நீள்வட்ட பாதையில் தனது பயணத்தை நிறைவு செய்து விட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா, ஜூலை 14 ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. இது வெற்றிகரமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி நிலவின் நீள்வட்ட பாதைக்குள் கடந்த வாரம் சென்றது. அதோடு சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக தனியாக பிரிந்து, நிலவை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் அடுத்த கட்டமாக நிலவின் நீள்வட்ட பாதையில் தனது பயணத்தை லேண்டர் விக்ரம் நிறைவு செய்து, நிலவை நோக்கி செல்ல துவங்கி விட்டதாக இஸ்ரோ தற்போது அறிவித்துள்ளது. நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதியை சென்றடைவதற்கு இன்னும் 25 கி.மீ., தூரம் மட்டுமே உள்ளது. மொத்தமாக நிலவின் தரைப்பரப்பை அடைவதற்கு 134 கி.மீ., மட்டுமே மீதம் உள்ளது. அடுத்த கட்டமாக நிலவின் தரைப்பரப்பில் வரும் புதன்கிழமையன்று லேண்டர் விக்ரம் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விக்ரமின் உட்புறம் அனைத்தும் சரியாக உள்ளதாக என சரிபார்க்கும் பணிகள் நடந்து வருவதாகவும், எந்த இடத்தில் தரையிறங்கும் என கணிப்பதற்கு சூரிய உதயத்திற்காக காத்திருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 23 ம் தேதி சுமார் மாலை 05.45 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படும் என இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?
டெல்லி கல்லூரி, மும்பை பங்குச் சந்தைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்.. தீவிர சோதனை!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
{{comments.comment}}