டெல்லி: நிலவின் சுற்றுப் பாதையில் இன்று இரவு சரியாக 7 மணியளவில் நுழைந்தது சந்திரயான் 3 விண்கலம். நிலவின் சுற்றுப் பாதையில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விடப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நிலவுப் பயணம் முக்கிய மைல்கல்லை இன்று இரவு எட்டியுள்ளது. ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஒவ்வொரு கட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் தற்போது முக்கியமான கட்டத்தை சந்திரயான் 3 விண்கலம் எட்டியுள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு சரியாக 7 மணியளவில் நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான் 3 விண்கலம். நிலவில் தரையிறங்கும் தருணத்தை சந்திரயான் 3 விண்கலம் நெருங்கியிருப்பது இந்தியர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரயான் விண்கலத்தில் விக்ரம் என்ற லேன்டரும், பிரக்யான் என்ற ரோவரும் பொருத்தப்பட்டுள்ளன.
சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கும் லேன்டருக்குப் பெயர்தான் விக்ரம். இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாய் நினைவாக அந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 1749 கிலோவாகும்.
பிரக்யான் என்பது ரோபோட்டிக் வாகனம் (ரோவர்) ஆகும். சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதும் இந்த பிரக்யான் ரோபாட்டிக் வாகனமானது நிலவின் தரைப்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வுகளில் ஈடுபடும். இந்த வாகனத்திற்கு 6 சக்கரங்கள் உள்ளன. எல்லாப் பக்கமும் திரும்பும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரக்யான் ரோபாட்டிக் வாகனம் 26 கிலோ எடை கொண்டதாகும்.
சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்திருப்பதை உலகெங்கும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அடுத்து நிலவில் சந்திரயான் 3 காலெடுத்து வைக்கும் நன்னாளை நோக்கி இந்தியர்கள் காத்திருக்கின்றனர்.
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}