டெல்லி: நிலவின் சுற்றுப் பாதையில் இன்று இரவு சரியாக 7 மணியளவில் நுழைந்தது சந்திரயான் 3 விண்கலம். நிலவின் சுற்றுப் பாதையில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விடப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நிலவுப் பயணம் முக்கிய மைல்கல்லை இன்று இரவு எட்டியுள்ளது. ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஒவ்வொரு கட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் தற்போது முக்கியமான கட்டத்தை சந்திரயான் 3 விண்கலம் எட்டியுள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு சரியாக 7 மணியளவில் நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான் 3 விண்கலம். நிலவில் தரையிறங்கும் தருணத்தை சந்திரயான் 3 விண்கலம் நெருங்கியிருப்பது இந்தியர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரயான் விண்கலத்தில் விக்ரம் என்ற லேன்டரும், பிரக்யான் என்ற ரோவரும் பொருத்தப்பட்டுள்ளன.
சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கும் லேன்டருக்குப் பெயர்தான் விக்ரம். இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாய் நினைவாக அந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 1749 கிலோவாகும்.
பிரக்யான் என்பது ரோபோட்டிக் வாகனம் (ரோவர்) ஆகும். சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதும் இந்த பிரக்யான் ரோபாட்டிக் வாகனமானது நிலவின் தரைப்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வுகளில் ஈடுபடும். இந்த வாகனத்திற்கு 6 சக்கரங்கள் உள்ளன. எல்லாப் பக்கமும் திரும்பும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரக்யான் ரோபாட்டிக் வாகனம் 26 கிலோ எடை கொண்டதாகும்.
சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்திருப்பதை உலகெங்கும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அடுத்து நிலவில் சந்திரயான் 3 காலெடுத்து வைக்கும் நன்னாளை நோக்கி இந்தியர்கள் காத்திருக்கின்றனர்.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}