டெல்லி: இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலமானது ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
முன்னதாக மாலை 5.47 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. தற்போது அந்த நேரத்தை மாற்றி 6.04 மணிக்கு தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவீட்டில், இதுவரை அனைவரும் கொடுத்து வந்த ஆதரவுக்கும், பாசிட்டிவான ஊக்குவிப்பிக்கும் நன்றி. ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும்.
இந்த நிகழ்ச்சியை இஸ்ரோவின் https://isro.gov.in இணையதளத்தில் நேரலையாக காணலாம். அதேபோல இஸ்ரோவின் யூடியூப் (https://youtube.com/watch?v=DLA_64yz8Ss), பேஸ்புக்கிலும் (https://facebook.com/ISRO) நேரலையாக காணலாம்.
DD National TV சானலிலும் சந்திரயான் 3 தரையிறங்கும் நிகழ்ச்சியை அன்று மாலை 5.27 மணி முதல் நேரலையாக காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த தேசமும் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் கால் வைக்கப் போகும் அந்த வரலாற்றுச் சாதனை நிமிடத்துக்காக காத்துக் கிடக்கிறது. மறுபக்கம், ரஷ்யாவின் நிலவுப் பயணம் தோல்வியில் முடிவடைந்துள்ளது இந்தியர்களிடையே வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}