டெல்லி: இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலமானது ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
முன்னதாக மாலை 5.47 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. தற்போது அந்த நேரத்தை மாற்றி 6.04 மணிக்கு தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவீட்டில், இதுவரை அனைவரும் கொடுத்து வந்த ஆதரவுக்கும், பாசிட்டிவான ஊக்குவிப்பிக்கும் நன்றி. ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும்.
இந்த நிகழ்ச்சியை இஸ்ரோவின் https://isro.gov.in இணையதளத்தில் நேரலையாக காணலாம். அதேபோல இஸ்ரோவின் யூடியூப் (https://youtube.com/watch?v=DLA_64yz8Ss), பேஸ்புக்கிலும் (https://facebook.com/ISRO) நேரலையாக காணலாம்.
DD National TV சானலிலும் சந்திரயான் 3 தரையிறங்கும் நிகழ்ச்சியை அன்று மாலை 5.27 மணி முதல் நேரலையாக காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த தேசமும் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் கால் வைக்கப் போகும் அந்த வரலாற்றுச் சாதனை நிமிடத்துக்காக காத்துக் கிடக்கிறது. மறுபக்கம், ரஷ்யாவின் நிலவுப் பயணம் தோல்வியில் முடிவடைந்துள்ளது இந்தியர்களிடையே வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?
டெல்லி கல்லூரி, மும்பை பங்குச் சந்தைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்.. தீவிர சோதனை!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
{{comments.comment}}