டெல்லி: இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலமானது ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
முன்னதாக மாலை 5.47 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. தற்போது அந்த நேரத்தை மாற்றி 6.04 மணிக்கு தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவீட்டில், இதுவரை அனைவரும் கொடுத்து வந்த ஆதரவுக்கும், பாசிட்டிவான ஊக்குவிப்பிக்கும் நன்றி. ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும்.
இந்த நிகழ்ச்சியை இஸ்ரோவின் https://isro.gov.in இணையதளத்தில் நேரலையாக காணலாம். அதேபோல இஸ்ரோவின் யூடியூப் (https://youtube.com/watch?v=DLA_64yz8Ss), பேஸ்புக்கிலும் (https://facebook.com/ISRO) நேரலையாக காணலாம்.
DD National TV சானலிலும் சந்திரயான் 3 தரையிறங்கும் நிகழ்ச்சியை அன்று மாலை 5.27 மணி முதல் நேரலையாக காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த தேசமும் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் கால் வைக்கப் போகும் அந்த வரலாற்றுச் சாதனை நிமிடத்துக்காக காத்துக் கிடக்கிறது. மறுபக்கம், ரஷ்யாவின் நிலவுப் பயணம் தோல்வியில் முடிவடைந்துள்ளது இந்தியர்களிடையே வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}