டெல்லி: இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலமானது ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
முன்னதாக மாலை 5.47 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. தற்போது அந்த நேரத்தை மாற்றி 6.04 மணிக்கு தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவீட்டில், இதுவரை அனைவரும் கொடுத்து வந்த ஆதரவுக்கும், பாசிட்டிவான ஊக்குவிப்பிக்கும் நன்றி. ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும்.
இந்த நிகழ்ச்சியை இஸ்ரோவின் https://isro.gov.in இணையதளத்தில் நேரலையாக காணலாம். அதேபோல இஸ்ரோவின் யூடியூப் (https://youtube.com/watch?v=DLA_64yz8Ss), பேஸ்புக்கிலும் (https://facebook.com/ISRO) நேரலையாக காணலாம்.
DD National TV சானலிலும் சந்திரயான் 3 தரையிறங்கும் நிகழ்ச்சியை அன்று மாலை 5.27 மணி முதல் நேரலையாக காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த தேசமும் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் கால் வைக்கப் போகும் அந்த வரலாற்றுச் சாதனை நிமிடத்துக்காக காத்துக் கிடக்கிறது. மறுபக்கம், ரஷ்யாவின் நிலவுப் பயணம் தோல்வியில் முடிவடைந்துள்ளது இந்தியர்களிடையே வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}