திருப்போரூர் முருகன் கோவிலில்.. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜுக்கு.. டும் டும் டும்..!

Feb 10, 2025,12:09 PM IST

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் மற்றும் டாக்டர் கௌசிகா திருமணம் இவர்களது திருப்போரூர் முருகன் கோவிலில் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியாளர் நியமனம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது மூன்றாவது முறையாக எஸ் அருண் ராஜ் ‌ஐஏஎஸ் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றதிலிருந்தே மக்கள் பிரச்சனைகளை உடனடியாக தீர்வுக்கான நடவடிக்கை எடுப்பேன் எனவும் உறுதியளித்தார். அதன்படி முதல்வரின் நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்து வரும் மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் கோரிக்கைகளை ஏற்று மூன்று நாட்களில் தீர்வு வழங்கி வருகிறார்.






செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எஸ் அருண்ராஜ் முன்னதாக பழனியில் சப்-கலெக்டராக பணியாற்றினார். பிறகு தமிழக அரசின் நிதித் துறையிலும், எல்காட் நிா்வாக இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் மற்றும் டாக்டர் கௌசிகா திருமணம் இன்று மிக எளிமையாக நடந்து முடிந்தது. நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நபர்கள் மட்டுமே கலந்து கொண்ட இவர்களது திருமணம் சென்னை அருகே உள்ள திருப்போரூர் கந்தசாமி கோயிலில் முருகன் சன்னிதானம் முன்பு மிக எளிமையாக நடைபெற்றது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்