சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு சென்னையை கடந்த சில நாட்களாக கடந்த 2 நாட்களாக போட்டு உலுக்கிக் கொண்டிருந்த Michaung (மிச்சாங் அல்லது மிக்ஜாம்) புயல் தற்போது சென்னையை விட்டு அப்பால் போய் விட்டது. வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த சென்னை தற்போது அதிலிருந்து மீளத் தொடங்கியுள்ளது.
Michaung புயல் வரலாறு காணாத பாதிப்பை சென்னைக்கும், அதன் புறநகர்களுக்கும் ஏற்படுத்தி விட்டது. இந்த அளவுக்கு இதுவரை மழையைப் பார்த்ததில்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பெரிய மழைப் பொழிவை சந்தித்தது வட தமிழ்நாடு. குறிப்பாக சென்னை.
கடந்த 45 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 470 மில்லி மீட்டர் அளவுக்கு அதீதமான மழைப்பொழிவை சென்னை சந்தித்தது. Michaung புயல் காரணமாக சென்னை நகரமே கடுமையாக ஸ்தம்பித்துப் போனது. ஒரே நேரத்தில் அப்ஸ்ட்ரீம் மற்றும் லோயர் ஸ்ட்ரீம் பகுதிகளில் பேய் மழை கொட்டியதால் அடையாறு, கூவம் ஆகிய ஆறுகள் நிரம்பி வழிந்தன. சாலைகள், தெருக்களிலும் வெள்ளம் போல மழை நீர் ஓடியதால் தண்ணீர் வடிய முடியாமல் திணறிப் போனது சென்னை.

கிட்டத்தட்ட 42 மணி நேரம் அளவுக்கு கன மழை கொட்டித் தீர்த்து விட்டது. நேற்று நள்ளிரவு வாக்கில்தான் மழை சற்று தணிந்து அமைதிக்குத் திரும்பியது சென்னை வானம். புயலானது நெல்லூர் மாவட்டக் கடலோரப் பகுதிக்கு ஷிப்டானதால் சென்னை தப்பியது.. தற்போது சுத்தமாக மழை நின்று விட்டது. வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது. நகரிலும், புறநகர்களிலும் தேங்கி நின்ற வெள்ளம் வழிந்தோட ஆரம்பித்துள்ளது. சென்னையின் முக்கியச் சாலைகளில் வெள்ளம் ஓரளவு வடிந்து விட்டது. பல பகுதிகளில் இன்னும் வடியவில்லை.
புறநகர்களைப் பொறுத்தவரை இன்னும் முழுமையான இயல்பு நிலை திரும்பவில்லை. மெல்ல மெல்ல நீர் வடிய ஆரம்பித்துள்ளது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த நீர் வடிந்து விட்டது. தெருக்களில் நீர் முழுமையாக வடியவில்லை. புயல் தற்போது முழுமையாக விலகி விட்டதால் சென்னைக்கு இன்றைய காலை சற்று நிம்மதியாக விடிந்துள்ளது. வெள்ளம் முழுமையாக வடிந்தால் இயல்பு நிலைக்கு சென்னையும் அதன் புறநகர்களும் திரும்பி விடும்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}