சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு சென்னையை கடந்த சில நாட்களாக கடந்த 2 நாட்களாக போட்டு உலுக்கிக் கொண்டிருந்த Michaung (மிச்சாங் அல்லது மிக்ஜாம்) புயல் தற்போது சென்னையை விட்டு அப்பால் போய் விட்டது. வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த சென்னை தற்போது அதிலிருந்து மீளத் தொடங்கியுள்ளது.
Michaung புயல் வரலாறு காணாத பாதிப்பை சென்னைக்கும், அதன் புறநகர்களுக்கும் ஏற்படுத்தி விட்டது. இந்த அளவுக்கு இதுவரை மழையைப் பார்த்ததில்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பெரிய மழைப் பொழிவை சந்தித்தது வட தமிழ்நாடு. குறிப்பாக சென்னை.
கடந்த 45 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 470 மில்லி மீட்டர் அளவுக்கு அதீதமான மழைப்பொழிவை சென்னை சந்தித்தது. Michaung புயல் காரணமாக சென்னை நகரமே கடுமையாக ஸ்தம்பித்துப் போனது. ஒரே நேரத்தில் அப்ஸ்ட்ரீம் மற்றும் லோயர் ஸ்ட்ரீம் பகுதிகளில் பேய் மழை கொட்டியதால் அடையாறு, கூவம் ஆகிய ஆறுகள் நிரம்பி வழிந்தன. சாலைகள், தெருக்களிலும் வெள்ளம் போல மழை நீர் ஓடியதால் தண்ணீர் வடிய முடியாமல் திணறிப் போனது சென்னை.

கிட்டத்தட்ட 42 மணி நேரம் அளவுக்கு கன மழை கொட்டித் தீர்த்து விட்டது. நேற்று நள்ளிரவு வாக்கில்தான் மழை சற்று தணிந்து அமைதிக்குத் திரும்பியது சென்னை வானம். புயலானது நெல்லூர் மாவட்டக் கடலோரப் பகுதிக்கு ஷிப்டானதால் சென்னை தப்பியது.. தற்போது சுத்தமாக மழை நின்று விட்டது. வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது. நகரிலும், புறநகர்களிலும் தேங்கி நின்ற வெள்ளம் வழிந்தோட ஆரம்பித்துள்ளது. சென்னையின் முக்கியச் சாலைகளில் வெள்ளம் ஓரளவு வடிந்து விட்டது. பல பகுதிகளில் இன்னும் வடியவில்லை.
புறநகர்களைப் பொறுத்தவரை இன்னும் முழுமையான இயல்பு நிலை திரும்பவில்லை. மெல்ல மெல்ல நீர் வடிய ஆரம்பித்துள்ளது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த நீர் வடிந்து விட்டது. தெருக்களில் நீர் முழுமையாக வடியவில்லை. புயல் தற்போது முழுமையாக விலகி விட்டதால் சென்னைக்கு இன்றைய காலை சற்று நிம்மதியாக விடிந்துள்ளது. வெள்ளம் முழுமையாக வடிந்தால் இயல்பு நிலைக்கு சென்னையும் அதன் புறநகர்களும் திரும்பி விடும்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}