சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு சென்னையை கடந்த சில நாட்களாக கடந்த 2 நாட்களாக போட்டு உலுக்கிக் கொண்டிருந்த Michaung (மிச்சாங் அல்லது மிக்ஜாம்) புயல் தற்போது சென்னையை விட்டு அப்பால் போய் விட்டது. வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த சென்னை தற்போது அதிலிருந்து மீளத் தொடங்கியுள்ளது.
Michaung புயல் வரலாறு காணாத பாதிப்பை சென்னைக்கும், அதன் புறநகர்களுக்கும் ஏற்படுத்தி விட்டது. இந்த அளவுக்கு இதுவரை மழையைப் பார்த்ததில்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பெரிய மழைப் பொழிவை சந்தித்தது வட தமிழ்நாடு. குறிப்பாக சென்னை.
கடந்த 45 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 470 மில்லி மீட்டர் அளவுக்கு அதீதமான மழைப்பொழிவை சென்னை சந்தித்தது. Michaung புயல் காரணமாக சென்னை நகரமே கடுமையாக ஸ்தம்பித்துப் போனது. ஒரே நேரத்தில் அப்ஸ்ட்ரீம் மற்றும் லோயர் ஸ்ட்ரீம் பகுதிகளில் பேய் மழை கொட்டியதால் அடையாறு, கூவம் ஆகிய ஆறுகள் நிரம்பி வழிந்தன. சாலைகள், தெருக்களிலும் வெள்ளம் போல மழை நீர் ஓடியதால் தண்ணீர் வடிய முடியாமல் திணறிப் போனது சென்னை.
கிட்டத்தட்ட 42 மணி நேரம் அளவுக்கு கன மழை கொட்டித் தீர்த்து விட்டது. நேற்று நள்ளிரவு வாக்கில்தான் மழை சற்று தணிந்து அமைதிக்குத் திரும்பியது சென்னை வானம். புயலானது நெல்லூர் மாவட்டக் கடலோரப் பகுதிக்கு ஷிப்டானதால் சென்னை தப்பியது.. தற்போது சுத்தமாக மழை நின்று விட்டது. வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது. நகரிலும், புறநகர்களிலும் தேங்கி நின்ற வெள்ளம் வழிந்தோட ஆரம்பித்துள்ளது. சென்னையின் முக்கியச் சாலைகளில் வெள்ளம் ஓரளவு வடிந்து விட்டது. பல பகுதிகளில் இன்னும் வடியவில்லை.
புறநகர்களைப் பொறுத்தவரை இன்னும் முழுமையான இயல்பு நிலை திரும்பவில்லை. மெல்ல மெல்ல நீர் வடிய ஆரம்பித்துள்ளது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த நீர் வடிந்து விட்டது. தெருக்களில் நீர் முழுமையாக வடியவில்லை. புயல் தற்போது முழுமையாக விலகி விட்டதால் சென்னைக்கு இன்றைய காலை சற்று நிம்மதியாக விடிந்துள்ளது. வெள்ளம் முழுமையாக வடிந்தால் இயல்பு நிலைக்கு சென்னையும் அதன் புறநகர்களும் திரும்பி விடும்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}