சென்னை: சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் தொடர்ந்து விட்டு விட்டு லேசான மழை பெய்து வருவதால் குளிர்ச்சிப் பிரதேசமாக சென்னையும், புறநகர்களும் மாறியுள்ளன. கோடை காலத்திலேயே ஊட்டி போன்ற சீதோஷ்ண சூழலுக்கு சென்னை மாறியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்த முன்னறிவிப்பையும் அது வெளியிட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.
நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.
புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தற்போது கத்திரி வெயில் இருந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக இந்த சூழல் முற்றிலுமாக மாறி வெயில் குறைந்து விட்டது. இந்த நிலையில் தற்போது பரவலாக மழையும் சேர்ந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்
சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில், அடுத்த 2 மணி நேரத்திற்கு சாலிடான மழை தொடரும். சில நேரங்களில் இது அடர்த்தியாகவும் இருக்கும். அதன் பிறகு தொடர்ந்து மழை பெய்யும்.
சென்னைக்கு இந்த மழை முக்கியமானது, தேவையானது. வட தமிழ்நாடு முழுவதுமே நல்ல மழை பெய்து வருகிறது. மழைக்காலம் போன்ற சூழல் தற்போது நிலவுகிறது என்று கூறியுள்ளார்.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}