தமிழ்நாடு முழுவதும் பரலாக நல்ல மழை.. சென்னையை டோட்டலாக கூலாக்கிய தொடர் மழை!

May 19, 2025,07:10 PM IST

சென்னை: சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் தொடர்ந்து விட்டு விட்டு லேசான மழை பெய்து வருவதால் குளிர்ச்சிப் பிரதேசமாக சென்னையும், புறநகர்களும் மாறியுள்ளன. கோடை காலத்திலேயே ஊட்டி போன்ற சீதோஷ்ண சூழலுக்கு சென்னை மாறியுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்த முன்னறிவிப்பையும் அது வெளியிட்டுள்ளது.




சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.


நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.


புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் தற்போது கத்திரி வெயில் இருந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக இந்த சூழல் முற்றிலுமாக மாறி வெயில் குறைந்து விட்டது. இந்த நிலையில் தற்போது பரவலாக மழையும் சேர்ந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்


சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில், அடுத்த 2 மணி நேரத்திற்கு சாலிடான மழை தொடரும். சில நேரங்களில் இது அடர்த்தியாகவும் இருக்கும். அதன் பிறகு தொடர்ந்து மழை பெய்யும்.


சென்னைக்கு இந்த மழை முக்கியமானது, தேவையானது. வட தமிழ்நாடு முழுவதுமே நல்ல மழை பெய்து வருகிறது. மழைக்காலம் போன்ற சூழல் தற்போது நிலவுகிறது என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்