சென்னை: சென்னையில் இன்று கடுமையான பனிமூட்டம் நிலவியதால் விமான சேவை கடும் பாதிப்பை சந்தித்தது. இதனால் பயணிகள் கடும் அவதியுற்றனர்.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் அதிகாலையில் அதிகப்பனிமூட்டமும் பிற்பகலுக்குப் பிறகு அதிக வெயிலும் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. அதேபோல் செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட இன்று அதிகாலை கடுமையான பனிப்பொழிவு நிலவியது.
தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் எதிரே உள்ள வாகனம் கூட கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். இந்த மூடுபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
சென்னையில் விமான சேவை பாதிப்பு

பனிமூட்டம் காரணமாக சென்னை விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆறு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், ஹைதராபாத் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டன. லண்டனில் இருந்து 317 பயணிகளுடன் வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. 252 பயணிகளுடன் மஸ்கட்டில் இருந்து புறப்பட்டு சென்னை வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. 122 பயணிகளுடன் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் புனேவிலிருந்து 152 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் திருவனந்தபுரத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதே சமயத்தில் குவைத்தில் இருந்து 148 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக தொடர்ந்து வானில் வட்டமடித்துக் கொண்டே இருந்தது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியற்றனர்.
சென்னை மட்டுமல்லாமல் புதுச்சேரி, வேலூர், திருப்பதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று கடுமையான மூடுபனி நிலவியது. அதேபோல் திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர், போன்ற பகுதிகளிலும் மிதமான மூடுபனி நிலவியது.
வட தமிழகப் பகுதிகளில் நாளையும் அடர்ந்த மூடுபனி காணப்படும். நாளை காலையிலும் இதே போன்ற பனிப்பொழிவை எதிர்பார்க்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெட்ரோல், டீசல்,சிலிண்டர் தட்டுப்பாடு...மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை:முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு!
உரிமைத்தொகை ஒருபுறம்; உயிர் அச்சம் மறுபுறம் - பெண்களைக் காக்கத் தவறிய திமுக அரசு: சீமான் ஆவேசம்!
பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்? - தமிழக அரசிற்கு விஜய் சரமாரி கேள்வி
சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு...ஓட்டல்கள், பெட்ரோல் பங்க்குகள் மூடல்
திமுக கூட்டணியில் காங்கிரசிற்கு 28, மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு
என்னாது சிலிண்டர் தீந்துருச்சா.. அடுப்பில்லாத சமையல் கைவசம் இருக்கே.. வாங்க வாங்க!
ஆப்கானிஸ்தான் - இலங்கை இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் திடீர் ஒத்திவைப்பு
காஸ் ஆட்டோக்களுக்கு சிக்கல்.. காஸ் நிரப்ப நீண்ட க்யூவில் காத்திருப்பபு.. பயணிகளும் பாதிப்பு
{{comments.comment}}