1975ல் பரவிய பயங்கர தீ.. நேற்று எரிந்த பெயர்ப் பலகை.. 2 முறை தப்பிய சென்னை எல்ஐசி!

Apr 03, 2023,09:57 AM IST

சென்னை: சென்னை அண்ணா சாலையில்  உள்ள 15 மாடி எல்ஐசி அலுவலகத்தில் தீவிபத்து நடந்திருப்பது புதிதல்ல. 1975ம் ஆண்டு மிகப் பெரிய தீவிபத்தை எல்ஐசி கட்டடம் சந்தித்தது. அந்த விபத்தோடு ஒப்பிட்டால் நேற்று நடந்தது சிறிய அளவிலான விபத்துதான்.

1975ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி இரவு 8 மணி இருக்கும். எல்ஐசி கட்டடத்தின் கீழ்த்தளத்தில் தீப்பிடித்துக் கொண்டது. அப்போது கடற்காற்று பலமாக வீசிக் கொண்டிருந்ததால் தீ மளமளவென்று நாலாபக்கமும் பரவத் தொடங்கியது. முதல் மாடிக்கு தீபரவி அப்படியே அடுத்தடுத்து 5 மாடிகளுக்கும் பரவ ஆரம்பித்தது.



அக்னியின் கைகளில் சிக்குண்ட எல்ஐசி கட்டடத்தைக் காப்பாற்ற சென்னை மாநகரில் இருந்த அத்தனை தீயணைப்பு வண்டிகளும் வரவழைக்கப்பட்டன. தண்ணீர் பற்றாத காரணத்தால் கூவத்திலிருந்து தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சிகள் நடந்தன. தீவிபத்தில் சிக்கி கண்ணாடி ஜன்னல்கள் கதவுகள் உடைந்து சிதறி மேலிருந்து விழுந்ததால் தீயணைப்பு வீரர்கள் பெரும் சிரமப்பட்டனர். கடும் போராட்டத்திற்கு இடையே தீயணைக்கும் பணிகள் தொடர்ந்தன. அடுத்த நாள் மாலை 6 மணிக்குத்தான் முழுமையாக தீ அணைக்கப்பட்டது. இந்த பெரும் தீவிபத்தில் சிக்கி எல்ஐசி கட்டடத்தின் 5 மாடிகளும் கடும் சேதமடைந்தன. அத்தனை பொருட்களும் எரிந்து சாம்பலாகி விட்டன.

இதுதான் எல்ஐசியில் நடந்த மிகப் பெரிய தீவிபத்து. 1959ம் ஆண்டு எல்ஐசி கட்டடம் கட்டப்பட்டது. அப்போது இதுதான் இந்தியாவிலேயே மிகவும் உயரமான கட்டடம் என்ற பெயரைப் பெற்றது. 

2012ம் ஆண்டு இன்னொரு அசம்பாவிதத்தை எல்ஐசி கட்டடம் சந்தித்தது. 11வது மாடியில் பெரும் விரிசல் ஏற்பட்டதால் மொத்த கட்டடமும் பீதிக்குள்ளாகியது. மெட்ரோ சுரங்கப் பணிகள் காரணமாகஇந்த விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் நேற்று 15வது மாடியில் இருந்த பெயர்ப் பலகை தீப்பிடித்து எரிந்துள்ளது.  அதிர்ஷ்டவசமாக ஆட்கள் யாரும் இல்லாத இடத்தில் தீவிபத்து நடந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்