சென்னையில் டிரெய்னைப் பிடிச்சா.. ஜஸ்ட் 4 மணி நேரம்தான்.. பெங்களூரு போய்ரலாம்!

Aug 19, 2023,09:59 AM IST
சென்னை: சென்னை டூ பெங்களூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் 4 மணி நேரமாக குறைக்கப்படவுள்ளது. மேலும் சில ரயில்களின் பயண நேரமும் சுமார் 20 நிமிடங்கள் வரை குறையப்போகிறது.

சென்னை - ஜோலார்பேட்டை இடையிலான விரைவு ரயிலின் வேகம் மணிக்கு 110 கிலோமீட்டர் இருந்து 130 கிலோ மீட்டராக அதிகரிக்கப்படுகிறது.  இந்த வழித்தடத்தில், தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்கள் சீரமைக்கப்பட்டதால் தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதேபோல அரக்கோணம் -ஜோலார்பேட்டை இடையிலான பயண நேரமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   

இந்த வழித்தடங்களின் பயண நேரம் குறைப்பால் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் அனைத்து ரயில்களின் பயண நேரமும் 4.25 மணி நேரமாகவும் , ஆகவும் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 4 மணி நேரமாகவும் குறையும். பெங்களூரு மட்டுமல்லாமல், இந்த மார்க்கத்தில் கோவை ,கொச்சி ,திருவனந்தபுரம், கோழிக்கோடு ,மும்பை போன்ற பெரிய நகரங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களின் பயண நேரமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரயிலின் பயண நேரம் குறைவதால் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இனி ஆம்னி பஸ்களை விட வேகமான முறையில் நாம் பெங்களூரு உள்ளிட்ட ஊர்களைச் சென்றடைய முடியும் என்பதோடு பயணச் சோர்வும் வெகுவாக குறையும்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்