சென்னை: சென்னையில் நடைபெற உள்ள 48வது புத்தகக் கண்காட்சியின் போது ஆறு பேருக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்படும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.
சென்னையில் 48வது புத்தகக் கண்காட்சி டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கி ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாலை 4.30 மணிக்கு சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் தொடங்கும் இந்த கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்க இருக்கின்றனர்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு இந்தக் கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் புத்தகக் காட்சியின்போது சிறந்த எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், சிறந்த புத்தக விற்பனையாளர்களுக்கு பபாசி பரிசுகள் பலவற்றை வழங்கி கௌரவித்து வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது, பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது சிறந்த நூல் வெளியீட்டாளர்களுக்கும், பதிப்புச் செம்மல் மணிவாசகர் பதிப்பகத்தின் மெய்யப்பன் விருது சிறந்த புத்தக விற்பனையாளருக்கும், அழ. வள்ளியப்பா விருது குழந்தைகளுக்கான சிறந்த நூல் எழுதியவருக்கும் வழங்கப்படுகிறது
அந்த வரிசையில், இந்த ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரம் வருமாறு:
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது

சிறந்த உரைநடைக்கான விருது-பேராசிரியர் அருணன்
சிறந்த கவிதைக்கான விருது- நெல்லை ஜெயந்தா
சிறந்த நாவலுக்கான விருது-சுரேஷ் குமார் இந்திரஜித்
சிறந்த சிறுகதைக்கான விருது- என். ஸ்ரீராம்
சிறந்த நாடகத்துக்கான விருது- கலைராணி
சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது-நிர்மால்யா
கலைஞர் பொற்கிழி விருது பெறுவோருக்கு சான்றிதழுடன், ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற விருதுகள் விவரம்:
சிறந்த பதிப்பாளருக்கான விருது - கற்பகம் புத்தகாலயம்
சிறந்த நூலகருக்கான விருது-டாக்டர் கோதண்டராமன்
முத்தமிழ்க் கவிஞர் முனைவர் விருது - மணவை பொன்.மாணிக்கம்
சிறந்த தமிழறிஞருக்கான விருது - முனைவர் சபா.அருணாச்சலம்
சிறந்த புத்தக விற்பனையாளருக்கான விருது - பெல் கோ
சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான விருது - எழுத்தாளர் சங்கர சரவணன்
சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான விருது - எழுத்தாளர் ஜோதி சுந்தரேசன்
சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருது - பேராசிரியர் பர்வீன் சுல்தானா
சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான விருது- மைந்தன் முத்தையா
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}