சென்னை: சென்னை மாநகர சாலை பகுதியில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் 1.30 கோடி அபராத வசூல் செய்ததாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர சாலை பகுதிகளில் மாடுகள் உலா வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அதே போல் சாலையோரங்களில் மாடுகள் உலா வருவது, படுத்திருப்பது போன்றவற்றால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் நடந்து செல்பவர்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அப்படி சாலையோரங்களில் படுத்திருக்கும் மாடுகள் திடீரென கொம்புகளை சிலுப்பிக் கொண்டு தாக்கும் அசம்பாவிதங்களும் நடைபெறுகின்றன.
இதனால் தெருக்கள் மற்றும் சாலைகளில் மாடுகள் நாய்களின் தொல்லை என நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் இதனால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த ஆண்டு அருகம்பாக்கத்தில் சிறுமி ஒருவர் பள்ளி முடித்து வீடு திரும்பும் போது தெருவில் உலா வந்த மாடு முட்டி வீசி எறிந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் எனவும், மீறி மாடுகள் சாலையில் சுற்றித் திரிந்தால் மாட்டு உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதனையடுத்து மாநகராட்சி தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதோடு மாடுகளைப் பிடித்து அபராதம் விதிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.இருப்பினும் மாட்டின் உரிமையாளர்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் முதல் முறை பிடிக்கப்பட்டால் பத்தாயிரம் ரூபாயும், இரண்டாவது முறை பிடிக்கப்பட்டால் மாட்டின் உரிமையாளருக்கு 15,000 அபராதம் விதிக்கப்படும். அதனை தொடர்ந்து ஒரு மாடுக்கு பராமரிப்பு செலவுக்காக கூடுதலாக ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் சென்னையில் சாலையில் சுற்றித்திரிந்த 2,527 மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}