ஆபத்து விளைவிக்கும் செல்ல பிராணிகளை.. பொது இடங்களுக்கு கொண்டு வந்தால்.. கடும் நடவடிக்கை!

May 08, 2024,06:36 PM IST

சென்னை: சென்னையில் தொடர்ந்து சிறுவர்களை நாய் கடித்த சம்பவம் அரங்கேறி வரும் நிலையில், ஆபத்து விளைவிக்கும் நாய்கள் மற்றும் செல்ல பிராணிகளை பொது இடங்களில் கட்டுப்பாடு இன்றி திரிய விட்டால் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி கடுமையாக எச்சரித்துள்ளது.


கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு  நுங்கம்பாக்கம் பூங்காவில்  காவலராக பணியாற்றும் ரகுவின் மகள் சுதக்ஷா  விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராட்வெய்லர் நாய்கள் ரகுவின் மகளை கடித்து குதறியது. இதனை தடுக்க முயன்ற ரகுவின் மனைவி சோனியாவையும் கடித்தது. அந்த சமயத்தில் நாயின் உரிமையாளர் நாயை கட்டுப்படுத்த முயன்று அவரால் முடியவில்லை. தப்பித்து ஓடிவிட்டார்.




நாய் கடித்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு அங்கிருந்த பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நாய் உரிமையாளர் புகழேந்தி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இந்த விசாரணையில் நாய் வளர்ப்பு உரிமத்தை புகழேந்தி பெறவில்லை என்பது தெரிய வந்தது.


அதேபோல் நேற்று மீண்டும் சென்னை வேளச்சேரியில் நாய் கடித்த மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. கோடை விடுமுறைக்காக ஆலத்தூர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த தனது அத்தை வீட்டிற்குச் அஸ்வந்த் என்ற 11 வயது சிறுவன் சென்றான். நேற்று மாலை விளையாடிக் அங்கு விளையாடிக் கொண்டிருக்கும்போது சைபீரியன் ஹஸ்கி வகை நாய் ஒன்று திடீரென சிறுவனை கடித்தது. இதில் சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சிறுவன் அலறி துடித்தான். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.


இதனை தொடர்ந்து சிறுவனுடைய பெற்றோர்கள் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.


இந்த நிலையில் சென்னையில் நாய் கடித்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆபத்து விளைவிக்கும் வகையில் நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளை தெருக்கள், பூங்காக்கள், மற்றும் பொது இடங்களில் கட்டுப்பாடு இன்றி திரியவிட்டால் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் அவ்வாறான நாய்கள் மற்றும் செல்ல பிராணிகளை இந்திய பிராணிகள் நல வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!

news

எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்

news

Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு

news

10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!

news

வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு

news

மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!

news

மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு

news

NDA கூட்டணியில் தவெக விஜய்?.. நயினார் நாகேந்திரன் அளித்த அதிரடி விளக்கம்

news

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி - பிடிவாதம் காட்டும் இடதுசாரிகள்.. தேமுதிகவுக்கு அதிகம் தர எதிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்