"ஏய்ய் பிடி பிடி".. வளைத்து வளைத்து மாடு பிடிக்கும்.. சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

Oct 19, 2023,02:39 PM IST
சென்னை: சென்னை மற்றும் புறநகர் தெருக்களில் மாடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள், விபரீதங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மாடுகளைப் பிடிக்கும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

சென்னை மாநகராட்சி சாலைகளில் மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு விபரீதங்கள் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ளன. மாடுகள் திடீரென மிரண்டு ஓடுவதாலும், முட்டுவதாலும், துரத்துவதாலும் சாலையில் தெருக்களில் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.



மாடுகளை தெழுவத்தில் கட்டி வைக்காமல் தெருவில் விடுவது. வீட்டில் வளர்க்கும் நாய்களையும் தெருக்களில் சுற்றித்திரிய விடுவது போன்றவற்றால்  அபாயம் அதிகம் இருப்பதை உணராமல் சிலர் கால்நடைகளை தெருக்களில் விடுகின்றனர். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அரசு என்ன கட்டுப்பாடுகளை கொண்டு வந்தாலும் கால் நடை வளர்ப்பாளர்கள் அவற்றை பொருட்படுத்துவதே கிடையாது. 

கெஞ்சம் நாட்களுக்கு முன்னர் சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் மாலை பள்ளி முடிந்து தாயுடன் சென்ற சிறுமியை மாடு முட்டியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அந்த சிறுமியை மேயர் பிரியா வீட்டுக்கே போய் சந்தித்து ஆறுதல் கூறி சாக்லேட் கொடுத்து நலம் விசாரித்து விட்டு வந்தார். 

இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி சம்பவம் மனதிலிருந்து மறைவதற்குள் திருவல்லிக்கேணி பகுதியில் நேற்று ஒரு முதியவரை மாடு தூக்கிப் போட்டு காயப்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அது கோவிலில் வளர்க்கப்பட்டு வந்த பசு மாடு என்று தெரிய வந்துள்ளது. இதனால் யார் மீது கேஸ் போடுவது என்று தெரியாமல் போலீஸார் குழம்பிப் போயுள்ளனர்.

தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு ஒழுங்காக தடுப்பு ஊசி போடாததினால் எத்தனை பேர் அவற்றின் கடியில் சிக்கி ரேபிஸ் நோய்க்கு ஆளாகியுள்ளனர்.  நாய்த் தொல்லையுடன் இப்போது இந்த மாட்டுத் தொல்லையும் சேர்ந்து கொண்டுள்ளது. இதையடுத்து சென்னையில் மாடுகளைப் பிடிக்கும் பணியில் மாநகராட்சி இறங்கியுள்ளது. 

இத்தகைய பிரச்சனைகளை ஏற்படுத்தி வரும் கால்நடைகளை பிடித்து அடைத்து வைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இறக்கி விடப்பட்டுள்ளனர். தினசரி சாலைகள், தெருக்களில் திரியும் மாடுகளை அவர்கள் பிடித்து வருகின்றனர்.  நேற்று ஒரே நாளில் 14 மாடுகள் பிடிபட்டன. அவற்றை முகாம்களில் கொண்டு போய் அடைத்தனர். சாலைகள், தெருக்களில் திரிய விடாமல் மாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் முறையாக கட்டிப்போட்டு வைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!

news

திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!

news

மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

news

அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்

news

பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?

news

தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!

news

த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!

news

இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?

news

எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்