சென்னை ஈசிஆர் சம்பவம்... 7 பேருக்குத் தொடர்பு.. 4 பேர் இதுவரை கைது.. 3 பேருக்கு வலைவீச்சு

Jan 31, 2025,06:52 PM IST

சென்னை : சென்னை ஈசிஆர் சாலையில் காரில் பெண்களை துரத்தி சென்ற விவகாரத்தில் மொத்தம் 7 பேருக்குத் தொடர்பு உள்ளதாகவும், அதில் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேரைத் தேடி வருவதாகவும் பள்ளிக்கரணை துணை காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.  இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்புகள் ஏதும் இல்லை என்றும் இணை ஆணையர் தெளிவுபடுத்தியுள்ளார்.


சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் காரில் வந்த இளைஞர்கள் சிலர், மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்தி உள்ளனர். தொடர்ந்து பெண்கள் பயணம் செய்த காரையும் அந்த இளைஞர்கள் சுற்றி வளைத்து தகராறில் ஈடுபடுவது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பரபரப்பை கிளப்பியது. இந்த விவகாரத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.


குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே பெண்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், காரில் பெண்களை துரத்தி சென்ற இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பெண்கள் சென்ற கார் இளைஞர்களின் காரை உரசி சென்றதாகவும், நியாயம் கேட்பதற்காகவே இளைஞர்கள் பெண்கள் வந்த காரை துரத்தி சென்றதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்பட்டது.




இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பதற்றமான நிலையை ஏற்படுத்தியதால் 5 தனிப்படைகள் அமைத்து போலீசார், அந்த இளைஞர்களை தேடி வந்தனர். ஈசிஆர் சாலையில் உள்ள சிசிடிவி கேமிராக்களையும் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பெண்களை துரத்தி சென்ற இரண்டு கார்களை பறிமுதல் செய்ததுடன், இதில் தொடர்புடைய சந்துரு என்ற கல்லூரி மாணவரை உள்பட 4 பேரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.


இதுதொடர்பாக பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில், புகார் வந்த 10 நிமிடங்களிலேயே சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டுக்குப் போலீஸார் சென்று விசாரணை நடத்தினர்.  இந்த சம்பவத்தில் 7 பேருக்குத் தொடர்பு உள்ளது. அதில் சந்துரு என்பவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களைத் தேடி வருகிறோம். இதில் சந்துருவுக்கு சிட்டி லிமிட்டில் 2 வழக்குகளில் தொடர்பு உள்ளது.


இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்புகள் ஏதும் இல்லை. டோல்கேட் போன்றவற்றில் காசு கொடுக்காமல் செல்வதற்காகவே காரில் திமுக கொடியை கட்டியுள்ளனர். அதை கட்டியது அந்தக் காரின் டிரைவர் என்று தெரிய வந்துள்ளது.  புகார் கொடுத்தவர்களின் கார் இந்த நபர்களின் காரில் இடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார் கார்த்திகேயன்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்