சென்னை : சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையின் பல பகுதிகளில் என்ன தான் மெட்ரோ ரயில் சேவை வந்தாலும் மின்சார ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையே அதிகம். சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மிக குறைந்த கட்டணத்திலேயே பயணிக்கலாம் என்பதால் அதிகமான மக்கள் மின்சார ரயிலிலேயே பயணம் செய்கிறார்கள். வேலைக்கு செல்வோரும் அதிகமானவர்கள் மின்சார ரயில்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது வார இறுதி நாட்களுடன், காந்தி ஜெயந்தி விடுமுறையும் சேர்ந்து கொண்டுள்ளதால் சென்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். விடுமுறை நாள் என்பதால் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால் தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தெற்கு ரயில்வே திட்டமிட்டது.
தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான மின்சார ரயில்களும், கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்களும் காலை 10.30 முதல் பகல் 3 மணி வரை இரண்டு நாட்களுக்கு இயக்கப்படாது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்ட நிலையில் கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாது செய்யப்படவில்லை. இதனால் மாநகர பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களும் சரியாக கிடைக்காமல் பலர் அவதி அடைந்துள்ளனர்.
விடுமுறை நாள் என்பதால் குடும்பத்துடன் வெளியில் செல்ல நினைத்தவர்கள் மின்சார ரயில்சேவை நிறுத்தப்பட்ட விபரம் தெரியாமல் ரயில் நிலையங்களில் கூட்டம் கூட்டமாக வந்து காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}