சென்னை : சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையின் பல பகுதிகளில் என்ன தான் மெட்ரோ ரயில் சேவை வந்தாலும் மின்சார ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையே அதிகம். சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மிக குறைந்த கட்டணத்திலேயே பயணிக்கலாம் என்பதால் அதிகமான மக்கள் மின்சார ரயிலிலேயே பயணம் செய்கிறார்கள். வேலைக்கு செல்வோரும் அதிகமானவர்கள் மின்சார ரயில்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது வார இறுதி நாட்களுடன், காந்தி ஜெயந்தி விடுமுறையும் சேர்ந்து கொண்டுள்ளதால் சென்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். விடுமுறை நாள் என்பதால் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால் தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தெற்கு ரயில்வே திட்டமிட்டது.
தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான மின்சார ரயில்களும், கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்களும் காலை 10.30 முதல் பகல் 3 மணி வரை இரண்டு நாட்களுக்கு இயக்கப்படாது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்ட நிலையில் கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாது செய்யப்படவில்லை. இதனால் மாநகர பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களும் சரியாக கிடைக்காமல் பலர் அவதி அடைந்துள்ளனர்.
விடுமுறை நாள் என்பதால் குடும்பத்துடன் வெளியில் செல்ல நினைத்தவர்கள் மின்சார ரயில்சேவை நிறுத்தப்பட்ட விபரம் தெரியாமல் ரயில் நிலையங்களில் கூட்டம் கூட்டமாக வந்து காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?
{{comments.comment}}