நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு விவாகரத்து.. சென்னை குடும்ப நல கோர்ட் உத்தரவு

Nov 27, 2024,08:45 PM IST

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இருவரின் 20 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.


சட்டரீதியாகத்தான் இன்று இவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் இவர்கள் இருவருமே கடந்த 2 வருடமாக பிரிந்துதான் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் தனுஷ். இந்த இருவரும் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். திரையுலகில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட திருமணம் இது.




தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்திற்குப் பின்னர் ஐஸ்வர்யாவும் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார் . இயக்குநராக அவதாரம் எடுத்த அவர் தனது கணவர் தனுஷையும், ஸ்ருதி ஹாசனையும் வைத்து 3 என்ற படத்தை இயக்கினார். இதுதான் இசையமைப்பாளர் அனிருத்தின் முதல் படமும் கூட. தொடர்ந்து சில படங்களை இயக்கிய ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.


இதைத் தொடர்ந்து  இருவரும் பிரியப் போவதாக அறிவித்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இவர்களை மீண்டும் சேர்க்க இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் முயற்சித்தனர். ஆனால் எந்த முயற்சியும் பலன் தரவில்லை. இந்த நிலையில் இன்று இருவரது விவாகரத்து வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி சுபாதேவி, இருவரது திருமணத்தையும் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார். இதன் மூலம் இருவரது திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளது.


தற்போது  தனுஷ் இயக்குநராகவும் பிசியாக இருக்கிறார். இட்லி கடை என்ற படத்தை இயக்கி வருகிறார். இன்னொரு படத்தையும் இயக்கி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்