செங்கல்பட்டு: மிச்சாங் புயல் காரணமாக கடந்த 8 நாட்கள் கடலுக்கு செல்லாமல் இருந்த மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர். இதனால் புதிய மீன்கள் ஏராளமான அளவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். ஆனால் புயல் காரணமாக மீன்கள் போதிய அளவுக்குக் கிடைக்குமா என்ற சந்தேகம் மீனவர்களுக்கு உள்ளது.
சென்னை அருகே கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்கும் மேலாக நிலை கொண்டிருந்த மிச்சாங் புயலால் பெரும் மழையும், பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களை கடுமையாக பாதித்து விட்டது. இந்த பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வருகின்றனர்.
புயல் வருவதற்கு முன்பே வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக, சென்னை மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் இருந்து வந்தனர். இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது. மீன்வரத்தும் இல்லாமல் போனது. மீனவர்கள், மீன் வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மக்களுக்கும் போதிய மீன் உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து மீனவர்களுக்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து இன்று அதிகாலையிலேயே மீன் பிடிக்கச் கடலு்குச் சென்றனர். புயல் காரணமாக மீன்கள் குறைவாகவே கிடைக்கும் என்பதால், குறைந்த அளவிலான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
சென்னையில் உள்ள எண்ணூர், காசிமேடு, பட்டினப்பாக்கம், உத்தண்டி உள்ளிட்ட அனைத்து கடலோரப் பகுதி மீனவர்களும் கடலுக்குள் போயுள்ளனர். அதேபோல செங்கல்பட்டு, நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்ட மீனர்களும் கடலுக்குள் போயுள்ளனர். 8 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு இன்று தான் கடலுக்கு சென்றுள்ளனர் என்பதால் மீனவ குடும்பங்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.. மக்களும்தான்!
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}