சென்னை: ஆவடி அருகே ஸ்நாக்ஸ் எடுப்பதற்காக ஃபிரிட்ஜை திறந்த போது ஐந்து வயது குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடியில் உள்ள நேதாஜி தெருவை சேர்ந்தவர் கௌதம் மற்றும் பிரியா தம்பதி.இவர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு லோன் வாங்கி தரும் பணியினை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஐந்து வயதான மூத்த மகள் ரூபாவதி தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ரூபாவதி தனது தங்கைகளுடன் விளையாடி உள்ளார். இதைத்தொடர்ந்து ஃப்ரிட்ஜில் உள்ள ஸ்னாக்ஸை எடுப்பதற்காக திறந்து உள்ளார்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக குழந்தையை மின்சாரம் தாக்கி உள்ளது. உடனே ரூபாவதி மயங்கி கீழே சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த தாய் பிரியா பதறிப்போய் குழந்தையை எழுப்பி பார்த்தும் எழவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா உடனே மகள் ரூபாவதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார்.
அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ரூபாவதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டதும் குழந்தையின் பெற்றோர்கள் கதறி துடிதுடித்தனர். பின்னர் குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தை அறிந்த ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதன் பின்னர் குழந்தை எப்படி இருந்தது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தை ஸ்னாக்ஸ் எடுப்பதற்காக ஃபிரிட்ஜை திறந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஐந்து வயது குழந்தை ரூபாவதி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மழைக்காலத்தில் மின்கசிவு அபாயம்
மின் கசிவு காரணமாக ஃப்ரிட்ஜ்,வாஷிங் மெஷின், செல்போன், உள்ளிட்ட உபகரணங்களால் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க எவ்வளவு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் ஒரு சிலரின் அஜாக்கிரதையால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்து தான் வருகிறது. இது போன்ற சம்பவம் நிகழ்வதற்கு காரணம் போதுமான விழிப்புணர்வு இன்மையே.
பொதுமக்கள் அவ்வப்போது வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களில் மின்சாரம் எவ்வளவு பாய்கிறது.. மின்சாரம் சீராக இருக்கிறதா அல்லது அதிகமாக பாய்கிறதா.. என்பது தொடர்பான சோதனை செய்து கொண்டு அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இதிலிருந்து விடுபட முடியும். குறிப்பாக மழைக்காலத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இது எங்கேயோ நடந்த இழப்பு என்று செய்தியை படித்து முடித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்காமல், நம் வீட்டிலும் இதுபோல நடந்தால் என்னாகும் என்பதை உணர்ந்து கவனத்துடன் இருக்க முயற்சிப்போம்.
விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!
நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து
விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!
வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்
அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!
துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை
ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்
{{comments.comment}}