சென்னை: தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கக்கோரி தவெக தொடர்ந்த வழக்கில் அனைத்துகட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிமுறைகளை வகுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார் தவெக தலைவர் விஜய். கடந்த வாரம் சனிக்கிழமை திருச்சியில் முதன்முறையாக விஜய் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார். திருச்சி நகருக்குள் உள்ள மரக்கடை பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்தார். அதனைத் தொடர்ந்து இரவில் அரியலூரில் விஜய் பிரச்சாரம் செய்தார். நேரமின்மை காரணமாக பெரம்பலூர் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த பிரச்சாரத்திற்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.

திருச்சியில் நடந்த பிரச்சாரத்தின் போது தவெகவிற்கு 23 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அடுத்து நடைபெறவுள்ள பிரச்சாரங்கள் சிலவற்றுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தவெக தலைவர் விஜய் நடத்தும் பிரச்சாரங்களுக்கு அனுமதி கேட்டு அளிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க வேண்டும். இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். உயரமான இடங்களில் ஏறி நின்று அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது?தொண்டர்களை கட்சி தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பொதுச்சொத்தை சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்க விதிகளை வகுக்க உத்தரவிடப்பட்டது. அனைத்துகட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிமுறைகளை வகுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் இந்த வழக்கு குறித்த விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மெய்நட்பு!
பழி சொல்லாத நிழல் நீ .. நட்பு!
வான் மழையும் காற்றும் தந்து வாழ்வு கொடுக்கும் மரங்களே!
வாசித்த இதயத்தில் யாசிக்க வந்த வரிகள் நீ
Book Review - புத்தக விமர்சனம்.. திட்டம் 6
நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!
நிழலாக நீயும் நிசமாக நானும்!
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
{{comments.comment}}