சென்னை: தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கக்கோரி தவெக தொடர்ந்த வழக்கில் அனைத்துகட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிமுறைகளை வகுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார் தவெக தலைவர் விஜய். கடந்த வாரம் சனிக்கிழமை திருச்சியில் முதன்முறையாக விஜய் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார். திருச்சி நகருக்குள் உள்ள மரக்கடை பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்தார். அதனைத் தொடர்ந்து இரவில் அரியலூரில் விஜய் பிரச்சாரம் செய்தார். நேரமின்மை காரணமாக பெரம்பலூர் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த பிரச்சாரத்திற்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.

திருச்சியில் நடந்த பிரச்சாரத்தின் போது தவெகவிற்கு 23 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அடுத்து நடைபெறவுள்ள பிரச்சாரங்கள் சிலவற்றுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தவெக தலைவர் விஜய் நடத்தும் பிரச்சாரங்களுக்கு அனுமதி கேட்டு அளிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க வேண்டும். இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். உயரமான இடங்களில் ஏறி நின்று அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது?தொண்டர்களை கட்சி தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பொதுச்சொத்தை சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்க விதிகளை வகுக்க உத்தரவிடப்பட்டது. அனைத்துகட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிமுறைகளை வகுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் இந்த வழக்கு குறித்த விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும்.. தவெக தலைவர் விஜய் பேச்சு
மக்கள் முக்கியமில்லை...பதவி தான் முக்கியம்...விஜய்யை விளாசிய டி.கே. எஸ். இளங்கோவன்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்ட மதுரை கலெக்டர்
செங்கோட்டையன் செல்லாக்காசு.. யாருமே ஏற்றுக் கொள்ளாததால் தவெகவுக்கு சென்றுள்ளார்: செல்லூர் ராஜூ
அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும்... தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
பாஜக எச்.ராஜா எப்படி இருக்கிறார்? அடுத்தடுத்து நலம் விசாரிக்கும் தலைவர்கள்
823 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயமா பிப்ரவரி 2026? – ஒரு சுவாரஸ்யமான அலசல்
மாம்பழ சின்னம் யாருக்கு?...பாமக வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் கட்?.. ஏன் இப்படி வதந்தி பரப்பறீங்க.. தனஞ்செயன் ஆதங்கம்
{{comments.comment}}