சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை!

Apr 01, 2023,10:46 AM IST

சென்னை:  சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்வது நிற்காமல் தொடர்கிறது. நேற்று மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிஎச்டி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பெயர் சச்சின் குமார் ஜெயின். 31 வயதான இவர் வேளச்சேரியில் தங்கி பிஎச்டி படிப்பை தொடர்ந்து வந்தார். அவருடன் தேவ்குஷ், தேவராஜ் ஆகிய மேலும் இரு பிஎச்டி மாணவர்களும் தங்கியிருந்தனர்.



கடந்த 3 மாதமாக இவர்கள் இந்த வீட்டில்தான் தங்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல 3 பேரும் ஐஐடிக்கு சென்றுள்ளனர்.  வகுப்பு முடிவதற்கு முன்பாகவே சச்சின் சீக்கிரமே கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டார். பிற்பகலில் வீடு திரும்பிய அவர் தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், என்னால் சரியாக படிக்க முடியவில்லை. ஸாரி என்று போட்டுள்ளார். பின்னர் அதை தனது நண்பர்கள் சிலருக்கும் அனுப்பி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.

அவரது ஸ்டேட்டஸைப் பார்த்த தேவ்குஷ் உடனடியாக வீட்டுக்கு விரைந்தார். அங்கு மயக்க நிலையில் சச்சின் கிடக்கவே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

வேளச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 வாரங்களுக்கு முன்புதான் 20 வயதான வைப்பு புஷ்பக் ஸ்ரீசாய் என்ற ஆந்திர மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.  ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்டீபன் சன்னி என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல இன்னொரு மாணவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். ஐஐடியில் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து வருவதை அனைவரையும் கவலை அடைய வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பங்குனி மாத சிவராத்திரி வெகு விசேஷமானது.. எப்படி தெரியுமா?

news

நவராத்திரி.. எத்தனை வகை இருக்கு பாருங்க.. அதுல இன்னிக்கு என்ன விசேஷம் தெரியுமா?

news

தெரியுமா...?

news

காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்

news

திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை

news

இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி: வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

news

தமிழ்நாடு, புதுச்சேரி வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

கரூர் வழக்கு: டில்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

news

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையிலான போர்.. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்