சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை!

Apr 01, 2023,10:46 AM IST

சென்னை:  சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்வது நிற்காமல் தொடர்கிறது. நேற்று மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிஎச்டி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பெயர் சச்சின் குமார் ஜெயின். 31 வயதான இவர் வேளச்சேரியில் தங்கி பிஎச்டி படிப்பை தொடர்ந்து வந்தார். அவருடன் தேவ்குஷ், தேவராஜ் ஆகிய மேலும் இரு பிஎச்டி மாணவர்களும் தங்கியிருந்தனர்.



கடந்த 3 மாதமாக இவர்கள் இந்த வீட்டில்தான் தங்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல 3 பேரும் ஐஐடிக்கு சென்றுள்ளனர்.  வகுப்பு முடிவதற்கு முன்பாகவே சச்சின் சீக்கிரமே கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டார். பிற்பகலில் வீடு திரும்பிய அவர் தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், என்னால் சரியாக படிக்க முடியவில்லை. ஸாரி என்று போட்டுள்ளார். பின்னர் அதை தனது நண்பர்கள் சிலருக்கும் அனுப்பி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.

அவரது ஸ்டேட்டஸைப் பார்த்த தேவ்குஷ் உடனடியாக வீட்டுக்கு விரைந்தார். அங்கு மயக்க நிலையில் சச்சின் கிடக்கவே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

வேளச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 வாரங்களுக்கு முன்புதான் 20 வயதான வைப்பு புஷ்பக் ஸ்ரீசாய் என்ற ஆந்திர மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.  ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்டீபன் சன்னி என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல இன்னொரு மாணவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். ஐஐடியில் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து வருவதை அனைவரையும் கவலை அடைய வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்