சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு உயர்ந்துள்ளது. சோழவரம் ஏறியில் மட்டுமே நீர் மட்டம் குறைவாக உள்ளது.
தற்போதும் ஏரிகளுக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கும் நிலையில் ஏரிகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நேற்று வரை 34 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய அக்டோபர் மாதத்தில் இருந்தே பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் அக்டோபர், நவம்பர் காலகட்டத்தில் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர் இருப்பு நன்றாக உயர்ந்தது.
தற்போது டிசம்பர் மாதத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடகிழக்குப் பருவ மழை மேலும் தீவிரமடைந்து வடகிழக்கு கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது.
குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஆறுகள், ஏரிகள், அணைகள், குளங்கள்,போன்ற நீர்நிலைகளின் நீர் இருப்பு குறையாமல் நீடித்து வருகிறது. குறிப்பாக வடகடலோர மாவட்டங்களான சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பும் உயர்ந்துள்ளது.
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், தமிழகத்தில் மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியார், வைகை அணை, பரம்பிக்குளம் என மொத்தம் 90 அணைகள் உள்ளன . இதில் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், வீராணம், தேர்வாய் கண்டிகை, போன்ற ஏரிகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று காலை நிலவரப்படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு விவரம் பின்வருமாறு:
பூண்டி நீர்த்தேக்கம்:
மொத்த கொள்ளளவு - 35 அடி (3231 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 34.67அடி (3038 மில்லியன் கன அடி)
தற்போது ஏரிக்கு 1090 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் வினாடிக்கு 817 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செங்குன்றம்
மொத்த கொள்ளளவு - 21.20 அடி (3300 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 19.43அடி (2898 மில்லியன் கன அடி)
தற்போது ஏரிக்கு 650 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் வினாடிக்கு 184 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம்
மொத்த கொள்ளளவு - 18.86 அடி (1081 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 6.09 அடி (235 மில்லியன் கன அடி)
தற்போது ஏரிக்கு நீர் வரத்து இல்லை ஆனால் வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
செம்பரம்பாக்கம்
மொத்த கொள்ளளவு - 24 அடி (3645 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 22.18(3167 மில்லியன் கன அடி)
தற்போது ஏரிக்கு 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் வினாடிக்கு 114 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை:
மொத்த கொள்ளளவு - 36.61 அடி (500 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 35.10 அடி ( 449 மில்லியன் கன அடி)
தேர்வாய் கண்டிகை ஏரிக்கு தற்போது நீர் வரத்து இல்லை. வெளியேற்றப்படுவதும் இல்லை.
வீராணம்:
மொத்த கொள்ளளவு-15.60 அடி(1465 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 15.25 அடி ( 1380 மில்லியன் கன அடி)
வீராணம் ஏரிக்கு தற்போது 1104 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் வினாடிக்கு 119 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணை நீர் மட்டம்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 2701 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் டெல்டா பாசனத்திற்காக 503 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.
120 அடி முழு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர் இருப்பு தற்போது 119.41 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது 92.534 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}