Chennai Lakes.. தொடர்ந்து பெய்த கன மழை எதிரொலி.. சென்னை ஏரிகளின் நீர் இருப்பு ஓ.கேதான்!

Dec 14, 2024,07:03 PM IST

சென்னை: தற்போது உருவாகும் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் வரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகரித்தால்  ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு  பகுதியால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. அதேபோல் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக அணைகளும் ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. 


இதற்கிடையே நாளை மீண்டும் தெற்கு அந்தமான் கடற்கரை பகுதிகளில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யக் கூடும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் மீதமுள்ள அணைகளும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 90 அணைகள் செயல்பட்டு வருகின்றன. அதில்  கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், ஆகிய ஏரிகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின்  தீவிரத்தால் சென்னைக்கு குடிநீர்  வழங்கும் ஏரிகளின் நீர் இருப்புகள் அதிகரித்து வருகிறது. 




சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு விவரம் பின்வருமாறு:


பூண்டி நீர்த்தேக்கம்:



மொத்த கொள்ளளவு - 35 அடி (3231 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 34.66 அடி (3034 மில்லியன் கன அடி)

தற்போது ஏரிக்கு  10,300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 16,527 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


செங்குன்றம்


மொத்த கொள்ளளவு - 21.20 அடி (3300 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 19.72அடி (2956 மில்லியன் கன அடி)

தற்போது ஏரிக்கு வரும் 709 கன அடி தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.


சோழவரம் 


மொத்த கொள்ளளவு - 18.86 அடி (1081 மில்லியன் கன அடி) 

நீர் இருப்பு - 7.85 அடி (305 மில்லியன் கன அடி)

ஏரிக்கு 232 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.


செம்பரம்பாக்கம்


மொத்த கொள்ளளவு - 24 அடி (3645 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 22.76(3315 மில்லியன் கன அடி)

தற்போது ஏரிக்கு 200450 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 4633 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை: 


மொத்த கொள்ளளவு - 36.61 அடி (500 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 31.95 அடி ( 353 மில்லியன் கன அடி)

தேர்வாய் கண்டிகை ஏரிக்கு தற்போது 250 மில்லியன் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 15 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஆளுநர் வெளிநடப்பு.. மைக் ஆப் செய்யப்பட்டதாகவும் பரபரப்பு புகார்!

news

ஆளுநர் உரையை வாசிக்காமல் முரண்டு பிடிப்பது நல்லதல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி.வெளியேறியது ஏன்?.. ஆளுநர் மாளிகை விளக்கம்

news

ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் வழக்கில் உத்தரவு ஒத்திவைப்பு

news

பொறுப்பேற்றதும் திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பேசிய பாஜக நிதின் நபின்

news

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசு... எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!

news

கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்

news

அம்பானி வீட்டு மின்சார கட்டணம் எவ்வளவு தெரியுமா? கேட்ட நீங்களே ஆசந்து போவீங்க!

news

யாருடன் கூட்டணி?...டிடிவி தினகரன் நாளை கட்சியினருடன் ஆலோசனை

அதிகம் பார்க்கும் செய்திகள்