Chennai Lakes.. தொடர்ந்து பெய்த கன மழை எதிரொலி.. சென்னை ஏரிகளின் நீர் இருப்பு ஓ.கேதான்!

Dec 14, 2024,07:03 PM IST

சென்னை: தற்போது உருவாகும் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் வரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகரித்தால்  ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு  பகுதியால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. அதேபோல் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக அணைகளும் ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. 


இதற்கிடையே நாளை மீண்டும் தெற்கு அந்தமான் கடற்கரை பகுதிகளில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யக் கூடும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் மீதமுள்ள அணைகளும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 90 அணைகள் செயல்பட்டு வருகின்றன. அதில்  கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், ஆகிய ஏரிகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின்  தீவிரத்தால் சென்னைக்கு குடிநீர்  வழங்கும் ஏரிகளின் நீர் இருப்புகள் அதிகரித்து வருகிறது. 




சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு விவரம் பின்வருமாறு:


பூண்டி நீர்த்தேக்கம்:



மொத்த கொள்ளளவு - 35 அடி (3231 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 34.66 அடி (3034 மில்லியன் கன அடி)

தற்போது ஏரிக்கு  10,300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 16,527 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


செங்குன்றம்


மொத்த கொள்ளளவு - 21.20 அடி (3300 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 19.72அடி (2956 மில்லியன் கன அடி)

தற்போது ஏரிக்கு வரும் 709 கன அடி தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.


சோழவரம் 


மொத்த கொள்ளளவு - 18.86 அடி (1081 மில்லியன் கன அடி) 

நீர் இருப்பு - 7.85 அடி (305 மில்லியன் கன அடி)

ஏரிக்கு 232 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.


செம்பரம்பாக்கம்


மொத்த கொள்ளளவு - 24 அடி (3645 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 22.76(3315 மில்லியன் கன அடி)

தற்போது ஏரிக்கு 200450 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 4633 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை: 


மொத்த கொள்ளளவு - 36.61 அடி (500 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 31.95 அடி ( 353 மில்லியன் கன அடி)

தேர்வாய் கண்டிகை ஏரிக்கு தற்போது 250 மில்லியன் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 15 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்