சென்னை: சென்னை நகரிலும் புறநகர்களிலும் காலை முதல் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இடி மின்னலுடன் பலத்த மழை பெய்வதால் சாலைப் போக்குவரத்து பல பகுதிகளில் முடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் ரயில்களை இயக்கி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நான்கு நாட்களுக்கு கன மழை தொடரும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே கணித்தபடி நேற்று இரவிலிருந்தே கன மழை தொடங்கி விட்டது. விட்டு விட்டு பெய்து வந்த மழை இன்று காலைக்கு மேல் விடாமல் பெய்ய ஆரம்பித்துள்ளது.
நகரிலும், புறநகர்கள் பலவற்றிலும் பலத்த இடி மின்னலுடன் மழை கொட்டிக் கொண்டுள்ளது. இதனால் சாலைப் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் அதிக அளவில் மக்கள் பயணிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் மக்கள் வசதிக்காக மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் ரயில்களை இன்று இயக்கி வருகிறது.
காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். வழக்கமாக 42 ரயில்கள் இயக்கப்படும். இன்று கூடுதலாக 5 ரயில்கள் இயக்கப்படுவதால் மொத்தம் 47 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கிரீன்லைனில் (புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்டிரல் மெட்ரோ முதல் புனித தாமஸ் மலை மெட்ரோ வரை) - ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.
ப்ளூ லைனில் (விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை) - ஒவ்வொரு 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.
வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் - அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ வரை - ஒவ்வொரு 3 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.
வெளியில் சென்றே ஆக வேண்டிய நிலையில் இருப்போர் பாதுகாப்பான முறையில் தங்களது பயணங்களை மெட்ரோவில் மேற்கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிறுவனம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}