பெருவெள்ளமா.. நீங்க வாங்க சந்திக்க நாங்க ரெடி.. கெத்தாக காத்திருக்கும் பள்ளிக்கரணை!

Nov 18, 2025,05:52 PM IST

- கலைவாணி கோபால்


சென்னை:  பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்னை மாநகராட்சி எல்லைக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ளது. இது தெற்கு சென்னையின் வெள்ளத்தைத் தடுக்கும் ஒரு முக்கியமான ஈரநிலம் (Wetland) ஆகும்.


சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் 50 சதுர கிலோமீட்டருக்கும் (5000 ஹெக்டேர்) அதிகமாக இருந்ததாகக் கூறப்படும் இந்தச் சதுப்பு நிலத்தின் தற்போதைய அதிகாரப்பூர்வப் பரப்பளவு சுமார் 1247.54 ஹெக்டேர் (ஏப்ரல் 2022 நிலவரப்படி). இதில் சுமார் 698 ஹெக்டேர் வனத்துறையின் கீழ் காப்புக் காடாக உள்ளது.


இது உலகளாவிய சூழலியல் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ராம்சார் ஒப்பந்தத்தின் கீழ், ஏப்ரல் 8, 2022 அன்று ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்ட பகுதியாகும்.


இந்தச் சதுப்பு நிலம் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் வெளிநாட்டிலிருந்து வரும் வலசைப் பறவைகள் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட பறவையினங்களுக்கு ஒரு முக்கியமான வாழ்விடமாகத் திகழ்கிறது.




பள்ளிக்கரணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பருவமழையால் பெரிதும் பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாகும். கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்கள் மற்றும் கனமழையின்போது, குறிப்பாக 2020-ல் நிவர் புயலின் போதும், அதனைத் தொடர்ந்த கனமழையின் போதும் (2023-ல் மிக்ஜாம் புயலின் போதும்) நாராயணபுரம் ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வடிகால் அமைப்புகளின் வழியாகத் தண்ணீர் வெளியேற முடியாமல், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.


இதன் காரணமாக, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படுதல், போக்குவரத்துப் பாதிப்பு, இயல்பு வாழ்க்கை முடக்கம் போன்ற பல பாதிப்புகளை மக்கள் சந்தித்துள்ளனர்.


தற்போது, கனமழையை முன்னிட்டு, வெள்ளத்தைத் தடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நாராயணபுரம் ஏரி மற்றும் பெரும்புக்கம் ஏரி போன்ற நீர்நிலைகளில் இருந்து அதன் கொள்ளளவுக்கு மேல் தேங்கும் நீர், தேவைக்கு ஏற்ப மதகுகள் வழியாக (ஒக்கியம் மடுவு) பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் மூலம் கடலுக்குள் திறந்துவிடப்படுகிறது.


இந்த நடவடிக்கை, வெள்ள நீர் வீடுகளில் புகுவதைத் தடுக்கும் மிக முக்கியமான வடிகால் செயலாகச் செயல்படுகிறது. நடப்பு மழைக்காலத்தில் பெரும் மழை பெய்தாலும் கூட சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


(சென்னையைச் சேர்ந்த கலைவாணி கோபால், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நண்டு சாப்பிடுவீங்களா?.. அப்படீன்னா கிட்ட வாங்க.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!

news

எங்க வீட்டுக் குலதெய்வம் வீரப்பன்.. செம்மண்ணை எடுத்து வந்து.. 25 பிள்ளையார் பிடித்து!

news

அறிவுக்கும் ஒரு திருக்கோவில் இருக்கு.. ஆழியாறு போனா இதை மறக்காதீங்க!

news

கோப்பையை ராகுல் டிராவிட், லட்சுமணுக்கு அர்ப்பணிக்கிறேன்.. கெளதம் கம்பீர் நெகிழ்ச்சி

news

தோல்விகள் பாடங்களைக் கற்பிக்கலாம்,.. ஆனால் வெற்றிகள் மட்டுமே வரலாற்றை எழுதும்!

news

India T20 World Cup Champion: அகமதாபாத்தில் புதிய வரலாறு.. 3வது டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா

news

T20 Cricket World Cup Finals: அகமதாபாத்தை அதிர விட்ட இந்தியா.. அடுத்தடுத்து பல உலக சாதனைகள் காலி!

news

இந்திய பேட்டிங் வேகத்தை சீர்குலைத்த ஜிம்மி நீஷம்.. சுத்த மோசம்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்!

news

ஹாட்ரிக் அரை சதம்.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வித்தை காட்டிய சஞ்சு சாம்சன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்