சென்னை: சென்னை ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தையை 4 மணி நேரத்தில் விரைந்து மீட்டு அசத்தியுள்ளனர் சென்னை போலீஸார்.
பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகளிலிருந்து குழந்தைகள் கடத்தப்படுவது அடிக்கடி நடக்கும். காரணம், கண்காணிப்பு சரியாக இல்லாத குழந்தைகளை திருடுவதற்கென்றே பல கும்பல்கள் உள்ளன. பெரும்பாலும் பெண்கள் அல்லது வயதானவர்கள்தான் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதுதான் இந்த கடத்தல் கும்பல்கள் கடைப்பிடிக்கும் டெக்னிக் ஆகும். இவர்கள் நேக்காக குழந்தைகளை தூக்கிக் கொண்டு வந்து விடுவார்கள் என்பதாலும், யாருக்கும் சந்தேகம் வராது என்பதாலும் இதுதான் கடத்தல் கும்பல்கள் கடைப்பிடிக்கும் டெக்னிக் ஆக உள்ளது.
இப்படித்தான் ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. ஒடிசாவில் இருந்து நந்தினி கண்காகர்-லாங்கேஸ்வர் தம்பதியினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். இரவு நேரம் என்பதால் ரயில் நிலையத்திலேயே தங்களது ஒரு வயது குழந்தையுடன் தங்கினர். நள்ளிரவில் விழித்து பார்த்த தம்பதியினர் குழந்தையை காணாமல் தேடியுள்ளனர். அங்கும் இங்குமாக தேடியும், குழந்தை கிடைக்காத காரணத்தினால் பதற்றமடைந்த தம்பதியினர் உடனடியாக அருகில் இருந்த காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் உடனடியாக ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிந்திருந்த காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். சிசிடிவி புட்டேஜில் ஒடிசா தம்பதியிந் குழந்தையை இருவர் கடத்தியது தெரியவந்ததது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் குழந்தையை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது.
கிட்டத்தட்ட 4 மணி நேர தேடுதலுக்கு பின் குழந்தையை கண்டுபிடித்து விட்டனர் குன்றத்தூர் பகுதியில் வைத்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தையைக் கடத்தி வந்தது ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}