சென்னை: சென்னை ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தையை 4 மணி நேரத்தில் விரைந்து மீட்டு அசத்தியுள்ளனர் சென்னை போலீஸார்.
பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகளிலிருந்து குழந்தைகள் கடத்தப்படுவது அடிக்கடி நடக்கும். காரணம், கண்காணிப்பு சரியாக இல்லாத குழந்தைகளை திருடுவதற்கென்றே பல கும்பல்கள் உள்ளன. பெரும்பாலும் பெண்கள் அல்லது வயதானவர்கள்தான் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதுதான் இந்த கடத்தல் கும்பல்கள் கடைப்பிடிக்கும் டெக்னிக் ஆகும். இவர்கள் நேக்காக குழந்தைகளை தூக்கிக் கொண்டு வந்து விடுவார்கள் என்பதாலும், யாருக்கும் சந்தேகம் வராது என்பதாலும் இதுதான் கடத்தல் கும்பல்கள் கடைப்பிடிக்கும் டெக்னிக் ஆக உள்ளது.

இப்படித்தான் ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. ஒடிசாவில் இருந்து நந்தினி கண்காகர்-லாங்கேஸ்வர் தம்பதியினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். இரவு நேரம் என்பதால் ரயில் நிலையத்திலேயே தங்களது ஒரு வயது குழந்தையுடன் தங்கினர். நள்ளிரவில் விழித்து பார்த்த தம்பதியினர் குழந்தையை காணாமல் தேடியுள்ளனர். அங்கும் இங்குமாக தேடியும், குழந்தை கிடைக்காத காரணத்தினால் பதற்றமடைந்த தம்பதியினர் உடனடியாக அருகில் இருந்த காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் உடனடியாக ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிந்திருந்த காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். சிசிடிவி புட்டேஜில் ஒடிசா தம்பதியிந் குழந்தையை இருவர் கடத்தியது தெரியவந்ததது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் குழந்தையை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது.
கிட்டத்தட்ட 4 மணி நேர தேடுதலுக்கு பின் குழந்தையை கண்டுபிடித்து விட்டனர் குன்றத்தூர் பகுதியில் வைத்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தையைக் கடத்தி வந்தது ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?
விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்
திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!
{{comments.comment}}