சென்னை: சென்னைக்கு வெகு அருகே புயல் தொடர்ந்து நிலை கொண்டிருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று நள்ளிரவு வரை மழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
சென்னையை உலுக்கி வரும் மழை எப்போது நிற்கும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் புதுத் தகவல் கூறியுள்ளார். அதில், நள்ளிரவு வரை மழை நீடிக்கலாம் என்று கூறியுள்ளார். இது ஏற்கனவே நீரில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்கு மேலும் அயர்ச்சியைக் கொடுப்பதாக உள்ளது.
இதுகுறித்து பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள புதிய தகவல்:

மிச்சாங் புயல் பொன்னேரி - ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் வியாபித்து நிற்கிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர் - காவாலி இடையே நாளை புயல் கரையைக் கடக்கும். புயல் அருகே இருக்கும் வரை நமக்கு மழை குறையாது. குறைந்தது இன்று நள்ளிரவு வரை நாம் காத்திருக்க வேண்டி வரும். புயலின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் பெரும் திரளாக மேகங்கள் கூடியுள்ளன. புயல் நமக்கு அருகே இருப்பதால் மேலும்
மழையை எதிர்பார்க்கலாம்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் கிட்டத்தட்ட நிரம்பி விட்டன. செங்குன்றம் ஏரிக்கு 4000 கன அடி நீர் கூடுதலாக வந்து கொண்டிருக்கிறது. பூண்டி அணைக்கு 6000 கன அடி நீர் வருகிறது, செம்பரம்பாக்கமும் புல்லாக உள்ளது. அங்கு 6000 கன அடி நீர் வருகிறது. சோழவரம் ஏரியிலும் 3000 கன அடி நீர் உபரியாக வருகிறது.
கடந்த 30 மணி நேரத்தில் மீனம்பாக்கத்தில் 380 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 360 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்
பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்
நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!
கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!
மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்
ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}