சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. யார் அந்த விஷமிகள்?.. இன்டர்போல் உதவியை நாடும் போலீஸ்!

Feb 09, 2024,05:57 PM IST

சென்னை: சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த  மர்ம நபர்களின் ஐபி முகவரி கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இன்டர் போல் உதவியை நாட சென்னை காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.


இதற்கிடையே இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப் பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.


சென்னையில்  கோபாலபுரம், அண்ணா நகர், முகப்பேர், ஆர்.ஏ.புரம், திருப்பாழிசை, பாரிமுனை, பூந்தமல்லி, பெரம்பூர், எழும்பூர்  பகுதிகளில் உள்ள 13 க்கும் மேற்பட்ட பிரபல தனியார் பள்ளிகளில் நேற்று காலை இமெயில் மூலம் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் தகவல் வந்தது.




இதை அடுத்து பள்ளி நிர்வாகத்தினர் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் மோப்பா நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன், பள்ளிகளுக்கு விரைந்து வந்து மாணவர்களை பத்திரமாக அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினர்.


இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு எங்கு உள்ளது என்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பள்ளிகளில் எந்த வெடிகுண்டுகளும் வைக்கப்படவில்லை.

இது வெறும் வதந்தியே என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.


இந்நிலையில் எந்த முகவரியில் இருந்து இமெயில் வந்தது என்பதை சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே ஈமெயில் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது

தெரியவந்தது. அதாவது  Johnsol01@gmail.com என்ற இமெயில் முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மர்ம நபர் யார் என்பதை கண்டறிய போலீஸார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அந்த நபரின் ஐபி அட்ரஸை கண்டுபிடிக்க முடியவில்லை. 


இது எந்த தொழில் நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் இன்டர்போல் உதவியுடன் இமெயில் அனுப்பிய மர்ம நபர்களை பிடிக்க சென்னை காவல் துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப் பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்