சென்னை: சென்னை மற்றும் புறநகரில் உள்ள 17 தனியார் பள்ளிகளுக்கு ஈமெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்ற மிரட்டல் விடும் விஷமிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பலர் குமுறல் வெளியிட்டுள்ளனர். இந்த விஷமிகளால் இன்று காலை சென்னையில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டு விட்டது.
சென்னை அண்ணா நகர், பாரி முனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலை புரம், திருமழிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பிரபல தனியார் பள்ளி பள்ளிகளுக்கு ஈமெயில் மூலம் ஒரே முகவரியிலிருந்து மர்ம நபர்களால் காலையில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் அழைத்துச் செல்லுமாறு வாட்ஸப், மெசேஜ் மற்றும் இமெயில் மூலம் செய்திகள் அனுப்பப்பட்டது. இதனை அடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட தனியார் பள்ளிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனைகளை நடத்தினர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. பலரும் பதறியடித்து பள்ளிகளுக்கு ஓடி வந்தனர்.
இதுபோன்ற மிரட்டல் விடுக்கும் நபர்களை கடுமையான சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோபமாக தெரிவித்தனர்.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}