17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. "விஷமிகளை குண்டாஸில் போடுங்க".. பெற்றோர்கள் கோபம்!

Feb 08, 2024,05:46 PM IST

சென்னை: சென்னை மற்றும் புறநகரில் உள்ள 17 தனியார் பள்ளிகளுக்கு ஈமெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்ற மிரட்டல் விடும் விஷமிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பலர் குமுறல் வெளியிட்டுள்ளனர். இந்த விஷமிகளால் இன்று காலை சென்னையில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டு விட்டது.


சென்னை அண்ணா நகர், பாரி முனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலை புரம், திருமழிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பிரபல தனியார் பள்ளி பள்ளிகளுக்கு ஈமெயில் மூலம் ஒரே முகவரியிலிருந்து மர்ம நபர்களால் காலையில்  வெடிகுண்டு மிரட்டல் வந்தது.




இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் அழைத்துச் செல்லுமாறு வாட்ஸப், மெசேஜ் மற்றும் இமெயில் மூலம் செய்திகள் அனுப்பப்பட்டது. இதனை அடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.


வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட  தனியார் பள்ளிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனைகளை நடத்தினர்.




வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. பலரும் பதறியடித்து பள்ளிகளுக்கு ஓடி வந்தனர்.


இதுபோன்ற மிரட்டல் விடுக்கும் நபர்களை கடுமையான சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோபமாக தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்