CSK vs RCB: பிரித்து மேய்ந்த பட்டிதர்.. டிம் டேவிட்.. 250 ரன்களை எப்படித் துரத்தப் போகுது சிஎஸ்கே?

Apr 05, 2026,07:45 PM IST

பெங்களூரு:  பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 11-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.


மிகப் பயங்கரமான பேட்டிங்கை இன்று பெங்களூரு அணி காட்டி விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸின் பந்து வீச்சாளர்களை கடுமையாக பனிஷ் செய்து விட்டது பெங்களூரு அணி. குறிப்பாக கடைசி ஓவர்களில் சிக்ஸர் மழை பொழிந்து பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தைக் குளிர வைத்து விட்டது.


முன்னதாக டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது.


டிம் டேவிட் பேயாட்டம் ஆடி விட்டார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய இவர், ஜேமி ஓவர்டன் வீசிய ஓவரில் மட்டும் 30 ரன்களை விளாசினார். வெறும் 25 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.




பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ரஜத் பட்டிதர் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 48 ரன்கள் (6 சிக்ஸர்கள்) சேர்த்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.


முன்னதாக தொடக்க வீரராக களமிறங்கிய கோலி 28 ரன்கள் எடுத்திருந்தபோது அன்ஷுல் கம்போஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பில் சால்ட் 46 ரன்கள் சேர்த்தார்.


சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் ஆர்சிபியின் அதிரடியை கட்டுப்படுத்த திணறினர். அன்ஷுல் கம்போஜ், ஷிவம் துபே மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.


251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது விளையாட ஆரம்பித்துள்ளது. சிஎஸ்கே அணி ஏற்கனவே தனது முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் பெங்களூரு ஸ்கோரைப் பார்த்தால் கொஞ்சம் பயந்துதான் வருது.!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்